Categories: சினிமா

பிரபல இயக்குநரின் படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பண மோசடி.!

Published by
Ragi

பிரபல இயக்குநரான கார்த்திக் நரேனின் படத்தில் வாங்கி தருவதாக வாட்ஸ்அப்பில் மர்ம நபர் ஒருவர் பண மோசடி செய்வதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் கார்த்திக் நரேன். துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து நரகாசுரன் என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது. அதனை தொடர்ந்து அருண் விஜய், பிரசன்னா ஆகியோரை வைத்து மாபியா படத்தை இயக்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்கவுள்ளார். சமீபத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார் இந்த படத்தின் இசை வெளியீட்டை பெரிய அளவில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அந்த படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது கார்த்திக் நரேனின் அடுத்த படத்தில் நடிப்பதற்கும், தொழில்நுட்ப பணிகளை செய்வதற்கும் வாய்ப்புகள் வாங்கி தருவதாக கூறி வாட்ஸ் அப்பில் மர்ம நபர் ஒருவர் பண மோசடி செய்வதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் கூறியதாவது, இப்போது ஒரு செய்தி தன் கண்ணில் பட்டதாகவும், ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து எனது அடுத்த படத்தில் பணிபுரிய வாங்கி தருவதாக கூறி பண வாங்கும் நபரை நம்ப வேண்டாம் என்றும், அந்த எண்ணிலிருந்து அவ்வாறு ஏதேனும் வந்தால் பிளாக் செய்து ரிப்போர்ட் செய்யுமாறும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago