Categories: சினிமா

பிரபல இயக்குநரின் படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பண மோசடி.!

Published by
Ragi

பிரபல இயக்குநரான கார்த்திக் நரேனின் படத்தில் வாங்கி தருவதாக வாட்ஸ்அப்பில் மர்ம நபர் ஒருவர் பண மோசடி செய்வதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் கார்த்திக் நரேன். துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து நரகாசுரன் என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது. அதனை தொடர்ந்து அருண் விஜய், பிரசன்னா ஆகியோரை வைத்து மாபியா படத்தை இயக்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்கவுள்ளார். சமீபத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார் இந்த படத்தின் இசை வெளியீட்டை பெரிய அளவில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அந்த படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது கார்த்திக் நரேனின் அடுத்த படத்தில் நடிப்பதற்கும், தொழில்நுட்ப பணிகளை செய்வதற்கும் வாய்ப்புகள் வாங்கி தருவதாக கூறி வாட்ஸ் அப்பில் மர்ம நபர் ஒருவர் பண மோசடி செய்வதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் கூறியதாவது, இப்போது ஒரு செய்தி தன் கண்ணில் பட்டதாகவும், ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து எனது அடுத்த படத்தில் பணிபுரிய வாங்கி தருவதாக கூறி பண வாங்கும் நபரை நம்ப வேண்டாம் என்றும், அந்த எண்ணிலிருந்து அவ்வாறு ஏதேனும் வந்தால் பிளாக் செய்து ரிப்போர்ட் செய்யுமாறும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

27 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

1 hour ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

1 hour ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

4 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

4 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

5 hours ago