2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து பங்கேற்கும் என சென்னையில் நடந்த மதிமுகவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதிமுகவின் நிர்வாகிகள் திமுகவில் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று ஜூன் 29-ந் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மதிமுகவின் தலைவர் வைகோ மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று, திமுக கூட்டணியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.
கூட்டயித்தில் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திராவிட மாடல் அரசு தொடர்ந்திடவும், இந்துத்துவ சக்திகளை முறியடிக்கவும், திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், மதுரை முருக பக்தர்கள் மாநாட்டு காணொளிக்கு மதிமுக நிர்வாகக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதியை அவமதிக்கும் காணொளிக்கு கண்டனம். அரசமைப்பின் முகவுரை குறித்த ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலரின் கருத்துக்கு கண்டனம். அண்ணா பிறந்தநாளை ஒட்டி திருச்சியில் செப்.15இல் மதிமுக மாநில மாநாடு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.