திரைப்படங்கள்

சூப்பர் ஸ்டாரின் ‘குண்டூர் காரம்’ படக்குழுவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு.! தமனின் வைரல் ட்வீட்…

Published by
கெளதம்

இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் ‘குண்டூர் காரம்’ திரைப்படம் பல்வேறு வதந்திகளால் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. குண்டூர் காரம் படப்பிடிப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது.

Guntur Kaaram [Image Source : youtube]

முன்னதாக, இப்படம் கிடப்பில் போடப்பட்டது என்ற வதந்திகளுக்குப் பிறகு, இப்பொது படத்தின் புதிய சர்ச்சை இசையமைப்பாளர் எஸ் தமன் மாற்றப்பட்டது என்பது தான். குண்டூர் காரம் படத்தில் இசையமைக்க இருந்த எஸ் தமனுக்கும் படக்குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Mahesh Babu and Guntur Kaaram team [Image Source : ndtv]

இந்நிலையில், வேறுபாடுகள் காரணமாக தமனுக்கு பதிலாக அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், கருத்து வேறுபாடுகளுக்கான காரணங்கள் தெரியவில்லை என்றாலும், பாடல்களை இசையமைப்பதிலும் வழங்குவதிலும் ஏற்பட்ட தாமதம் காரணமாக அவர் நீக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mahesh Babu and Guntur Kaaram team [Image Source : cnv3]

அதாவது, மகேஷ் பாபுவுக்கு  இந்த படத்தில் தமனை இசையமைக்க விரும்பவில்லை என்றும், ஆனால் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் தான் அவரை ஒப்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வதந்திகள் உண்மையா? பொய்யா? என்பது தெரியவில்லை.

Mahesh Babu and Guntur Kaaram team

அந்த வகையில், இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டரில், ‘தனது ஸ்டுடியோவிற்கு அருகில் மோர் கடை தொடங்குகிறேன். வயிற்று அழற்சி இருப்பவர்களுக்கு இலவசமாகவும் தருகிறேன். தயவுசெய்து என் நேரத்தை வீணாக்காதீர்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது’ என நக்கலாக ட்வீட் செய்துள்ளார்.

இந்த வதந்திகளுக்கு மத்தியில், குண்டூர் காரத்தின் படப்பிடிப்பு ஜூன் 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம, 2024 சங்கராந்திக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

14 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

14 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

15 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

16 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

16 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

17 hours ago