திரைப்படங்கள்

வெங்கட் பிரபுவை கண்ணாபின்னானு திட்டிய விஜய்.! கதை அப்படி போகுதா?

Published by
கெளதம்

நடிகர் விஜய் தற்போது தனது 67-வது படமான ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Thalapathy68 [Image Source : Twitter/@r_mithran]

படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை, அதற்குள் படத்தில் நடிக்கும் விஜய்க்கு ரூ.200 கோடி சம்பளம் என்றும், படத்தின் தலைப்பு ‘சிஎஸ்கே’ என பல தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thalapathy 68 Title [Image source : file image]

இதற்கெல்லாம் காரணம் வேற யாருமில்ல நம்ம வெங்கட் பிரபு தான். ஆம்….இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த பிறகு, இயக்குனர் வெங்கட் பிரபு எங்கு சென்றாலும் ரசிகர்கள் இப்படத்தின் பற்றிய கேட்கும் கேள்விக்கு பதில் கொடுத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் எந்த ஒரு விஷயத்தையும் வெளியிட கூடாது என்று விஜய் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திட்டிவிட்டாராம்.

vijay venkat prabhu [Image source : file image]

இவ்வாறு இனிமேல் நடந்து கொண்டால், அடுத்த படத்தின் இயக்குனரை கூட மாற்றி விடுவேன் என்றெல்லாம் கூறினாராம். இவ்வாறு, நம்ப தக்க சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஏன்னென்றால், லியோ படத்தின் பிஸினஸ் பெரிய அளவிற்கு இருப்பதால், இப்பொது அடுத்த படத்தின் பற்றிய தகவல்களை வெளியிடுவது நலத்துக்கு இல்லை. இது விஜய்யின் மார்க்கெட்டை கெடுத்துவிட கூடும் என கிசுகிசுக்கப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

27 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

1 hour ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

1 hour ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

1 hour ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago