தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமாரை வைத்து தீனா படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற அடுத்ததாக விஜயகாந்த் வைத்து ரமணா என்ற படத்தை இயக்கினார்.
இந்த படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து கஜினி, 7-ஆம் அறிவு, ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றிபெற்று, விஜய்க்கு மார்க்கெட்டை உயர்த்தியது என்றே கூறலாம். அந்த வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து கத்தி, சர்கார் படத்தை இயக்கினார். இந்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
கடைசியாக ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கியனார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.அடுத்தாக வெற்றியை கொடுத்தாகவேண்டும் என்ற நோக்கத்துடன், விஜயிடம் ஒரு கதை கூறியுள்ளார். ஆனால் விஜய்க்கு கதையின் இரண்டாவது பகுதி பிடிக்கவில்லை என்பதால் மறுத்துவிட்டாராம்.
இந்த நிலையில், மீண்டும் வெற்றியை கொடுக்கும் நோக்கில் ஏ.ஆர். முருகதாஸ் நடிகர் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி இருவரிடமும் தனி தனி கதையை கூறியுள்ளாராம். இருவரில் யார் கால்ஷீட் கொடுக்கிறார்களோ அவரின் திரைப்படத்தை முதலில் இயக்குவார் என்று கூறப்படுகிறது.
விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் 10 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளதால், எப்போது கால்ஷீட் கொடுப்பார்கள் என்று சரியாக தெரியவில்லை. கால்ஷீட் கொடுத்த பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…