சினிமா

அப்பாவை மக்கள் சரியாக கொண்டாடவில்லை! இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் வேதனை!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்கள் பல ஹிட் பாடல்களை கொடுத்ததும் அவர்களை மக்கள் சரியாக கொண்டாடாமல் இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய பாடல்கள் பெரிய அளவில் வெளியே தெரிந்தாலும் கூட, அவர்களுடைய பெயர் பெரிய அளவிற்கு வெளிய தெரிந்தது இல்லை. அப்படி தான் இசையமைப்பாளர் வித்யாசாகர் கூட, இவர் ரஜினி, கமல்ஹாசன், அஜித், விஜய் என டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார்.

இவர் இசையமைத்த சந்திரமுகி, அன்பே சிவம், பூவெல்லாம் உன் வாசம், கில்லி ஆகிய படங்களின் பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டி எங்கும் அந்த சமயம் எல்லாம் பெரிய ஹிட் ஆனது. அந்த சமயம் மட்டுமில்லாமல் இப்போது கூட இவர் இசையமைத்திருந்த பாடல்கள் எல்லாம் இப்போதும் பலரும் கேட்டு ரசித்து வருகிறார்கள்.

இருந்தாலும், இசையமைப்பாளர் வித்யாசாகரை பெரிய அளவில் மக்கள் கொண்டாடவில்லை. இதனை அவருடைய மகனும் பாடகருமான ஹர்ஷ வர்தன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ஹர்ஷ வர்தன் ” நான் மகனாக இல்லாமல் ஒரு ரசிகராக சொல்லவேண்டும் என்றால் மக்கள் அப்பாவை சரியாக கொண்டாடவில்லை.

என்னுடைய அப்பாவுக்கு இருக்கும் அந்த இசை குறித்த அறிவு எல்லாம் எங்களுடைய குடும்பத்திற்கு தெரியும். ஆனால், மக்களுக்கு தெரியவில்லை. அப்போது மட்டுமில்லை இப்போதும் தான். அவர் இசையமைத்து கொடுத்திருந்த ஹிட் பாடல்களை வைத்து தான் அவர் யார் என்று மக்களுக்கு தெரிகிறது. இதன் காரணமாக தான் நான் அப்பாவுடைய பழைய பாடல்களை திரும்பவும் என்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறேன்” என கூறியுள்ளார்.

மேலும், ஹர்ஷ வர்தன் தொடர்ச்சியாக தன்னுடைய தந்தையின் பாடல்களை பாடி வீடியோவை வெளியிட்டதை தொடர்ந்து ரசிகர்களாக சென்னையில் பிரமாண்டமாக இசைக்கச்சேரியை இசையமைப்பாளர் வித்யாசாகர் நடத்தினார். அவருடைய இசை கச்சேரியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

36 minutes ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

1 hour ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

1 hour ago

”ஈரான் ஒருபோதும் சரணடையாது”- அமெரிக்க அதிபருக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.!

இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…

2 hours ago

சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு.!

டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…

3 hours ago

இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.., சென்னை ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்த ரத்து.!

சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.  அதன்படி, இரவு…

3 hours ago