நடிகர் சங்க தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள எம்ஜிஆர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜுன் 23 தேதி நடைபெறுகிறது.நாசர் தலைமையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பதவி வகித்த பாண்டவர் அணி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறது.இந்த அணியை எதிர்த்து இயக்குநர் பாக்கிராஜ் தலைமையில் ஐசரி கணேஷ் ,உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் உள்ளிட்டவை நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது நடிகர் சங்க தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள எம்ஜிஆர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறை கல்லூரிக்கு அளித்துள்ள விளக்கத்தில்,கல்லூரி உள்ள இடத்தில் முக்கியமான பிரமுகர்கள் பயணம் செய்யும் பாதையாக உள்ளது.குறிப்பாக நீதிபதிகள்,முதலமைச்சர்,அமைச்சர்கள் இந்த பாதை வழியே செல்கின்றனர் .எனவே இந்த கல்லூரியில் தேர்தல் நடத்தினால் பாதுகாப்பு அளிக்க சிரமம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.மேலும் தேர்தல் அன்று 8000-க்கும் அதிகமானோர் கூட உள்ளதால் பாதுக்காப்பு வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…