நடிகர் சங்க தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள எம்ஜிஆர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜுன் 23 தேதி நடைபெறுகிறது.நாசர் தலைமையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பதவி வகித்த பாண்டவர் அணி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறது.இந்த அணியை எதிர்த்து இயக்குநர் பாக்கிராஜ் தலைமையில் ஐசரி கணேஷ் ,உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் உள்ளிட்டவை நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது நடிகர் சங்க தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள எம்ஜிஆர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறை கல்லூரிக்கு அளித்துள்ள விளக்கத்தில்,கல்லூரி உள்ள இடத்தில் முக்கியமான பிரமுகர்கள் பயணம் செய்யும் பாதையாக உள்ளது.குறிப்பாக நீதிபதிகள்,முதலமைச்சர்,அமைச்சர்கள் இந்த பாதை வழியே செல்கின்றனர் .எனவே இந்த கல்லூரியில் தேர்தல் நடத்தினால் பாதுகாப்பு அளிக்க சிரமம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.மேலும் தேர்தல் அன்று 8000-க்கும் அதிகமானோர் கூட உள்ளதால் பாதுக்காப்பு வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
கலிபோர்னியா : சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேருடன் புறப்பட்ட டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 22…
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15, 2025) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.…
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15, 2025) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.…
லண்டன் : ஜூலை 10 முதல் 14 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை கொலை…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…