rajinikanth and prabhu deva [File Image]
நடிகர் ரஜினியின் தன்னுடைய படங்களில் நடிக்கும் ஸ்டைலுக்காகவே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்று கூறலாம். அந்த அளவிற்கு ஒரு காட்சி சாதாரணமாக இருந்தாலும் அதனை ஸ்டைலாக மாற்றி தனக்கான ஒரு பாணியை அமைத்து அனைவரையும் ரஜினிகாந்த் வியக்க வைத்து விடுவார். அப்படிப்பட்ட ரஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பின் போது நடன காட்சிகள் வந்தாலே நடுங்கி விடுவாராம்.
இந்த தகவலை பிரபல நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா சமீபத்திய பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார். இதுவரை 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ரஜினிகாந்த் நடன காட்சிகள் என்றால் மட்டும் சற்று பதட்டம் அடைந்து விடுவாராம். படபிடிப்பு சமயங்களில் நடன காட்சி வந்தது என்றால் அந்த மாஸ்டர்களிடம் நடன காட்சியா என்பது போல அதிர்ச்சி அடைந்து விடுவாராம்.
அறிய வாய்ப்பு! சினிமாவில் நடிக்க ஆர்வமா? சூர்யா நிறுவனம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!
படப்பிடிப்பில் மற்ற காட்சிகளில் எல்லாம் அசத்தலாக நடித்து கெத்தாக நடிப்பாராம். நடன காட்சி என்றால் ரோபோ போல பயந்துவிடுவாராம். பாடல் காட்சி எடுக்கிறோம் என்றவுடன் காலில் 20-பது கயிறுகளை கட்டிவிட்டது போல ஆகிவிடுவாராம். பிறகு படக்குழுவினர் உங்களுக்கு தெரிந்த ஸ்டெப்களை போடுங்கள் என கூறுவார்களாம்.
அதற்கு ரஜினி நீங்கள் சொல்வது சரி தான் இருந்தாலும் நடனம் என்றாலே சற்று பயமாக இருக்கிறது என்று கூறுவாராம். எனவே எப்போதும் ரஜினிகாந்திற்கு நடனம் மீது பெரிய மரியாதையும் பயம் கலந்த ஒரு மரியாதையும் இருப்பதாகவும் பிரபுதேவா கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பிரபுதேவா ரஜினி எப்போதுமே நல்ல மனிதர்.
நாம் வெளியே இருந்து பார்க்கும் போது ரஜினி சார் பெரிய ஹீரோ என்பது போல இருக்கமாட்டார். அவருடன் எந்த அளவிற்கு நெருங்கி பழகிக்கிறோமோ அதே அளவிற்கு அவர் அன்பாக பார்த்துக்கொள்வார். அந்த அளவிற்கு ஒரு நல்ல மனிதர்” என ராகவ லாரன்ஸ் ரஜினியை புகழ்ந்து பேசியுள்ளார்.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…