Categories: சினிமா

16 ஆண்டுகளாக தொடரும் பருத்திவீரன் சர்ச்சை…வேதனையில் தயாரிப்பாளர் தாணு.!

Published by
கெளதம்

இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு இடையே பருத்திவீரன் பட சமயத்தில் நடந்த பிரச்னை தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஞானவேல் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் பருத்திவீரன் திரைப்படம் 2 கோடி 75 லட்சத்தில் எடுக்கப்படவேண்டிய திரைப்படம்.

ஆனால், படம் எடுத்து முடிக்க அதிக பணம் ஆகிவிட்டது. அன்று எனக்கு சினிமாவை பற்றி பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது. பருத்திவீரன் தான் என்னுடைய முதல் படம் எனவே, கணக்கில் என்னை அமீர் ஏமாற்றிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார் எனவும் கடுமையாக தாக்கி பேசியிருந்தார். பின், ஞானவேல் சொல்வதில் ஒன்றில் கூட உண்மை இல்லை என இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றையும் வெளியீட்டு இருந்தார்.

அதன் பிறகு, இந்த விவகாரம் குறித்து பருத்தி வீரன்’ படத்தில் தொடர்புடைய நடிகர்கள் சமுத்திரக்கனி, சசிகுமார் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் பலர் அமீருக்கு ஆதரவாகவும், ஞானவேல்ராஜாவை கடுமையாக சாடியுள்ளனர். அந்த வகையில், இப்போது ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குமென தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வேதனையில் இருக்கிறாராம்.

ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்! அமீருக்கு ஆதரவாக இறங்கிய சினேகன்!

இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில், சூர்யாவுடன் இயக்குநர் அமீரும் இணைந்து நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், பருத்திவீரன் படம் மற்றும் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், இதனால் ஏற்பட்ட பஞ்சாயத்தால் ‘வாடிவாசல்’ மேலும் தாமதமாக கூடும் என்பதால் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு  கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

வாடிவாசல்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா  நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.  படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த ஆண்டு நடைபெற்றது. அதற்கான சின்ன வீடியோ ஒன்றும் வெளியானது.

Recent Posts

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

35 minutes ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

1 hour ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

11 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

12 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

14 hours ago