Categories: சினிமா

பொன்னியின் செல்வன் சிறப்பு காட்சிக்கு மறுப்பு.! ஏமாற்றத்தில் ரசிகர்கள்…

Published by
கெளதம்

பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி நாளை பிரம்மாண்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

நாளை வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்க தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டது. இப்படத்தின் முதல் பாகம் அதிகாலை 4 மணி முதலே காட்சிப் படுத்தப்பட்டன. ஆனால், இரண்டாம் பாகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மேலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இதனை கண்காணிக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் காட்சி காலை 9 மணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருப்பதை விட, ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அதாவது, இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸான வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களுக்கு நள்ளிரவு காட்சி திரையிடப்பட்டது.  நள்ளிரவு காட்சியின் போது, சென்னையில் துணிவு திரைப்பட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஒரு இளைஞர், லாரி மேல் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், நள்ளிரவு மற்றும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி தமிழ்நாடு அரசு மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

1 hour ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

1 hour ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

2 hours ago

லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…

3 hours ago

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா புழல் சிறையில் இருந்து விடுவிப்பு.!

சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…

3 hours ago

பிரதமர் மோடிக்கு உயரிய விருது அளித்து கவுரவித்த நமீபியா அரசு..!!

நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…

3 hours ago