pushpa 2 [file image ]
புஷ்பா 2 : அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா . படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 15-ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பருக்கு தள்ளி செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தற்போது புஷ்பா 2 படம் குறித்து ஆங்கில இதழ் ஒன்று எழுதியுள்ள செய்தி சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளது. அது என்ன செய்தி என்றால், படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் சுகுமார் புஷ்பா கோபத்தில் தனது ஐபோனை வீசி உடைத்த செய்தி தான். இந்த படத்தில் ஒரு முக்கியமான காட்சியை படமாக்கும் பணியில் நடிகர்கள் யாரும் சரியாக நடிக்கவில்லை என்பதால் சுகுமார் மிகவும் கோபமடைந்துவிட்டாராம்.
இதன் காரணமாக தான் கடும் கோபத்தில் இயக்குனர் சுகுமார் போனை உடைத்துவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. உண்மையில் இந்த தகவல் பற்றி அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. விரைவில் இதனை பற்றி இயக்குனர் சுகுமார் அல்லது படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீதேஜ், அனசூயா பரத்வாஜ், திவி வத்யா, ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…