samantha trisha [file image]
நடிகை சமந்தாவிற்கு பாலிவுட்டில் இருந்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அவர் புஷ்பா படத்தில் இடம்பெற்று இருந்த ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி தெலுங்கு சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
எனவே, தற்போது அவருக்கு பாலிவுட்டில் இருந்து படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் , அவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். சல்மான் கான் டைகர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
அந்த திரைப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், அந்த திரைப்படத்தில் நடிக்க த்ரிஷா மறுப்பு தெரிவித்துவிட்டாராம். ஏனென்றால், தேதி பிரச்சனை காரணமாக அவரால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
அந்த மாதிரி படத்தில் நடிக்க முடிவெடுத்த அனுஷ்கா?
எனவே, த்ரிஷா மறுப்பு தெரிவித்துள்ள காரணத்தால் படக்குழு சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். ஏற்கனவே சமந்தா முன்னதாக சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவிருந்தார் என தகவல்கள் வெளியான நிலையில், அது முற்றிலும் வதந்தி என சமந்தா கூறிருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அவர் சல்மான் கானுக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் நடிகை சமந்தா தற்போது சிட்டால் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…