Categories: சினிமா

3-வது வாரத்தை கடந்த ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’! நெகிழ்ச்சியாக பேசிய சதிஷ்!

Published by
பால முருகன்

காமெடி நடிகர் சதிஷ் நடிப்பில் வெளியான ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. த்ரில்லர் கதை அம்சத்தை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தினை செல்வின் ராஜ் சேவியர்  என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் சதிஷுடன் ஆனந்தராஜ், எல்லி அவ்ரம், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி இன்னும் பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. 3-வாரங்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் படம் ஓடி வருகிறது.

தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா? 

இந்த நிலையில், மக்கள் அனைவர்க்கும் நடிகர் சதிஷ் நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கான்ஜுரிங் கண்ணப்பன் படம் வெற்றிகரமாக மூன்றாவது நாள் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த திரைப்படம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு பிடித்த படமாக இருக்கிறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எல்லா திரையரங்குகளிலும் பார்த்தேன் படத்தை குடும்பமாக பார்த்தார்கள்.

ரொம்ப நாள் கழித்து ஒரு குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் படமாக இந்த படம் அமைந்தது எனக்கு மன நிறைவாக உள்ளது. இன்னும் படம் திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கிறது. படம் பார்க்காதவர்கள் படத்தை குடும்பத்தோடு பாருங்கள். மக்கள் கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி” எனவும் நடிகர் சதிஷ் தெரிவித்துள்ளார். மேலும் கான்ஜுரிங் கண்ணப்பன் இதுவரை உலகம் முழுவதும் 8 கோடி வரை வசூல் செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

7 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

8 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

9 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

9 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

10 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

10 hours ago