சினிமா

Viji : மர்மமான மரணம்? ‘கோழி கூவுது’ விஜி பற்றி யாருக்கும் தெரியாத சீக்ரெட்!

Published by
பால முருகன்

1982 ஆம் ஆண்டு  கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கோழி கூவுது திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை விஜி. இந்த திரைப்படத்தில் நடித்துமுடித்த பிறகு தான் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது என்றே கூறலாம். இந்த படத்தில் அவர் நடித்து முடித்த பிறகு விஜியை பலரும் கோழி கூவுது விஜி  என்று தான் அழைத்தனர்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை விஜி அடுத்ததாக சாட்சி, பொய்க்கால் குதிரை, என் பிரியமே, உள்ளம் உருகுதடி, சூரியன், பூவே உனக்காக உள்ளிட்ட பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். இவர் நடித்த படங்களும் இவருக்கு வெற்றியை தேடி தந்தது. எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் நடித்து கொடுக்க கூடிய ஒரு நல்ல நடிகையும் இவர்.

இந்நிலையில், நடிகை விஜி நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் சினிமா மீது ஆர்வமே இல்லாமல் தான் நடித்து வந்தாராம். அவருடைய தந்தை நீ சினிமாவில் நடி என வற்புறுத்தியதன் காரணமாக தான் அவர் சினிமாவிற்குள் வந்தாராம். நடிகை என்பதையும் தாண்டி சிறிய வயதிலே நடிகை விஜி சிலம்பம் மற்றும் கராத்தே ஆகியவற்றை கற்றுக்கொள்ளவும் செய்தாராம்.

சினிமாவில் இவர் தொடர்ச்சியாக நடித்து வந்த காலகட்டத்தில் ஒரு இயக்குனருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அந்த பழக்கம் காதலாக மாற அந்த இயக்குனரை  விஜி தீவிரமாக காதலித்தாராம். பிறகு இவர் காதலிப்பதாக அந்த தகவல் வெளியே வர கொஞ்சம் விஜிக்கு மார்க்கெட் குறைந்ததாம்.

அந்த இயக்குனரும் நடிகை விஜியும் காதலிப்பதாக பரவிய தகவலை அடுத்து அந்த இயக்குனரிடம் இந்த கேள்வியை சிலர் அந்த சமயம் கேட்டார்களாம் அதற்கு அந்த இயக்குனர் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என கூறினாராம். அதன் பிறகு தான் கோழி கூவுது விஜி மர்மமான முறையில் மரணமடைந்தார் எனவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த விஜி கடைசியாக கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான சிம்மாசனம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அதே ஆண்டில் நவம்பர் மாதம் மர்மமான முறையில் இறந்தார். இவருடைய மறைவு எப்படி நடந்தது என இன்று வரை தெளிவான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

2 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

2 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

3 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

4 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

4 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

5 hours ago