சிலம்பரசனின் 50வது திரைப்படத்தை அவரே இயக்க உள்ளாராம். அதற்கான கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம்.
மாநாடு படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து சிலம்பரசன் தனது அடுத்த இன்னிங்க்ஸை கோலாகலமாக தொடங்கியுள்ளார். அடுத்தடுத்து அவர் தனது படங்களின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வருகிறார்.
தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங்கில் உள்ளார். மாநாடு வெற்றி கொண்டாட்டத்திற்கு பிறகு இன்று மீண்டும் வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த படத்தை அடுத்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதனை அடுத்து ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இதனை அடுத்து சிலம்பரசனின் 50வது திரைப்படம் தயாராக உள்ளது. இந்த படத்தை அவரே இயக்க உள்ளாராம். அதற்கான கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…