vandalur zoo lion [File Image]
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், ஷேரு என்ற 3 வயது ஆண் சிங்கத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார். சிங்கத்தை 6 மாதங்களுக்கு பராமரிக்க, சிவகார்த்திகேயன் சுமார் ரூ.75,000 செலுத்தியுள்ளாராம்.
சிங்கத்தை தத்தெடுப்பதற்கான கால அவகாசம் ஆறு மாதங்கள் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி அவரது ரசிகர்கள் அனைவரிடமும் இந்த செய்தி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கொரோனா காலத்தில், வண்டலூர் பூங்காவில், விலங்குகள் பராமரிக்க முடியாமல் உயிரிழந்தன. இதையடுத்து விலங்குகளை தத்தெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, பலரும் விலங்குகளை தத்தெடுத்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் விலங்குகளை தத்தெடுப்பது இது முதல் முறையல்ல… தற்போது, சிங்கத்தை தத்தெடுத்த அதே இடத்தில் ஏற்கனவே யானை மற்றும் சிங்கத்தை தத்தெடுத்துள்ளார்.
செப்டம்பர் 2021 இல், நடிகர் விஷ்ணு என்ற சிங்கத்தையும் பிரகிருதி என்ற யானையையும் அதே மிருகக்காட்சிசாலையில் இருந்து தத்தெடுத்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, ஆறு மாத காலத்திற்கு அந்த விலங்குகளை தத்தெடுத்துள்ளாராம்.
தற்போது, மடோன் அஷ்வின் இயக்கி வரும் ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் வருகிறார். இது ஒரு அவுட் அண்ட் அவுட் ஆக்ஷன் படமாகும். இவருடன் நடிகை அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…