சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு – தமிழ் என இருமொழிபடமாக உருவாகும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரேம் ஜியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
சில விஷயங்களை தமிழ் சினிமாவில் இருந்து பிரிக்க முடியாது. அப்படி பிரித்தாலும் அது ரசிகர்கள் ரசிக்கும் படி அமைவது கடினம். அப்படி சில கூட்டணிகள் தமிழ் சினிமாவில் உண்டு. அதில் ஒரு கூட்டணி தான் வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் ஹீரோ நண்பர் கதாபாத்திரத்தில் பிரேம் ஜி நடிப்பது.
அண்ணன் வெங்கட் பிரபு படைகளை தவிர பெரும்பாலும் வேறு படங்களில் பிரேம் ஜி நடிப்பதில்லை. அப்படி நடித்தாலும் அந்த படம் பெரிய வரவேற்பு பெறுவதில்லை. அப்படி, கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் பிளாக் பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்த மாநாட்டில் அதிக நேரம் வராவிட்டாலும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரேம் ஜி நடித்திருந்தார்.
தற்போது வெளியான தகவலின் படி, சிவகார்த்திகேயன் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதிப் என்பவரது இயக்கத்தில் தமிழ் – தெலுங்கு என இருமொழிபடமாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். அதில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கிட்டத்தட்ட ஹீரோக்கு அடுத்தபடியான கதாபாத்திரமான அதில் பிரேம் ஜியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
வெங்கட் பிரபு அடுத்த படம் ஏதும் தற்சமயம் அறிவிக்கவில்லை என்பதால், நிச்சயம் சிவகார்த்திகேயன் படத்தில் பிரேம்ஜி இருப்பார் என கூறப்படுகிறது. விரைவில் அந்த படம் குறித்த அதிகாரபூர்வ அப்டேட்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…