சினிமா

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிக்க மறுத்த எஸ்.ஜே.சூர்யா! காரணம் என்ன தெரியுமா?

Published by
பால முருகன்

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியரை வைத்து “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.

சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா இந்த திரைப்படத்தில் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழுந்தது. அந்த அளவிற்கு இதுவரை இல்லாத வகையில் அவருடைய கெட்டப் சற்று வித்தியாசமானதாக இருந்தது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவே ஒப்புக்கொள்ளவில்லையாம்.

ஏனென்றால், இந்த திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஸ்கோப் இல்லை என்று அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியதாம். இதன் காரணமாக தான் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் கூறினாராம். ஏற்கனவே, அவர் கார்த்திக் இயக்கத்தில் இறைவி திரைப்படத்தில் நடித்திருந்தார். எனவே, இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்த காரணத்தால் மனம் விட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தார்களாம்.

அப்போது, கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் கண்டிப்பாக பெரிய அளவில் பேசப்படும். உங்களை போல ஒரு நடிகர் இந்த திரைப்படத்தில் நடித்தால் தான் கண்டிப்பாக இந்த கதாபாத்திரம் நன்றாக இருக்கும் எனவும், இந்த கதாபாத்திரத்திற்கு ஒரு நல்ல நடிகர் தான் வேண்டும் என்று கார்த்திக்  சொன்னதால் தான் எஸ்.ஜே.சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

அது மட்டுமின்றி, “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளரான சத்யஜித் ரேயின் உதவி இயக்குநராக நடிக்கிறார். எனவே, அதனால்தான், அவரது கெட்டப் மற்றும் ஸ்டைல் அப்படியே படத்தில் இருக்கிறாராம். இந்த தகவலை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்த‌த்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!

அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…

4 minutes ago

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…

1 hour ago

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

2 hours ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

4 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

4 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

5 hours ago