Categories: சினிமா

மிக்ஜாம் புயல் பாதிப்பு: தொழிலதிபராக முன் வந்து நிதி வழங்கிய சூரி.!

Published by
கெளதம்

மிக்ஜாம்புயல் சென்னையைத் தாக்கி ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது, நகரம் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக நிதியுதவி அளித்து வருகின்றனர்.

முன்னதாக நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த லிஸ்டில் சமீபத்திய நடிகர் சூரி இணைந்துள்ளார். தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு (சிஎம்பிஆர்எஃப்) ரூ.10 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்த ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்கள்! முதலிடத்தில் எந்த படம் தெரியுமா?

இது தொடர்பாக, உதியநிதி தனது X தள பக்கத்தில்,  திரைப்பட நடிகர் அண்ணன் சூரி அவர்கள் மதுரை அம்மன் உணவகம் சார்பில், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ‘தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதி’க்கு ரூ.10 லட்சம் காசோலையை வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நடிகராக இல்லாமல், தொழிலதிபராக முன் வந்து நிதியுதவி செய்தது அனைவரையும் ஈர்த்துள்ளது. இந்த நிதி அளிக்கும் திரையுலக பிரபலங்களின் லிஸ்டில் முதல் ஆளாக, நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் மிக்ஜாம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கினர்.

Recent Posts

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

55 minutes ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

57 minutes ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

2 hours ago

திருமணம் முடிந்த 10 நாட்களில் கார் விபத்தில் பறிபோன கால் பந்து வீரர் உயிர்.!

சென்னை :  லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…

2 hours ago

‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…

4 hours ago

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…

4 hours ago