வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Published by
பால முருகன்
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஹிட்டான திரைப்படம் வின்னர். இந்த திரைப்படத்தில் வடிவேலு, கிரண் ரத்தோட், ரியாஸ் கான், எம். என்.நம்பியார், நிரோஷா, எம்.என்.ராஜம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.

காலங்கள் கடந்தும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நல்ல காமெடி படமாக இந்த படம் இருந்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இந்த படத்தின் இயக்குனர் சுந்தர் சி படத்தை தான் காப்பி அடித்து எடுத்ததாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” வின்னர் படத்தை இயக்குவதற்கு முன்பு தயாரிப்பாளர் என்னிடம் ஒரு கேசட் கொடுத்து இதில் நிறைய தெலுங்கு படம் இருக்கிறது நீங்கள் இதனை பார்த்துவிட்டு எதாவது படம் பிடித்து இருந்தால் சொல்லுங்கள் நாம் ரீமேக் செய்யலாம் என்று கூறினார். நான் அந்த படங்களை பார்த்தவுடன் ரொம்பவே அதிர்ச்சியாகிவிட்டேன். ஏனென்றால், என்னுடைய படத்தை பார்த்து அப்படியே படத்தை எடுத்து வைத்து இருந்தார்கள்.

இதனால் எனக்கு ரொம்பவே கோபம் வந்துவிட்டது. என்னுடைய படத்தை காப்பி அடித்து எடுத்த அந்த இயக்குனர் மீது கோபம் வரவில்லை மொத்தமாகவே தெலுங்கு சினிமா மீதே கோபம் வந்துவிட்டது. என்னுடைய 3 படத்தை காப்பி அடிச்சு எடுத்து வைத்துவிட்டீர்களா? நான் உங்களை பழி வாங்குறேன் என்று தான் வின்னர் படத்தை எடுத்தேன்.

வின்னர் படத்தை தெலுங்கு படங்களை பார்த்து தான் காப்பி அடித்து எடுத்தேன். 4 படங்களை காப்பி அடித்து எழுதிய படம்தான் ‘வின்னர்’. ஹீரோவை ஹீரோயின் அடி வாங்க வைப்பது போல ஒரு படத்தில் இருந்த காட்சியை அப்படியே வைத்தால் சரியாக இருக்காது என்பதால் ‘இதோ வந்துட்டேன்’ என வடிவேலு குறுக்கே வந்து விழும் காட்சியை எடுத்தேன்.

நான் தெலுங்கில் இருந்து காப்பி அடித்ததை, அப்படியே காப்பி அடித்து வேறொரு தெலுங்கு படத்தில் வைத்துவிட்டார்கள். அப்போது என்னுடைய தோல்வியை நான் ஒப்புக்கொண்டேன். பழிவாங்குவதிலும் தோல்வி அடைந்துவிட்டேன்” எனவும் இயக்குனர் சுந்தர் சி கலகலப்பாக பேசியுள்ளார். மேலும் சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 படம் வரும் மே 3- தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா.., கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.!

தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…

16 minutes ago

தூத்துக்குடி விமான நிலையம் இன்று திறப்பு.., சிறப்பம்சங்கள் என்னென்ன.?

தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…

37 minutes ago

“அன்புமணி நடைப்பயணத்துக்கு தடையில்லை” – பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்.!

சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…

1 hour ago

சிறுமி வன்கொடுமை – வடமாநில இளைஞரிடம் விடிய விடிய விசாரணை.!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…

1 hour ago

பிரதமர் மோடியைச் சந்திக்க இபிஎஸ் திட்டம்.! அனுமதி மறுக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்றம்.!

தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…

2 hours ago

நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!

சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…

3 hours ago