வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Published by
பால முருகன்
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஹிட்டான திரைப்படம் வின்னர். இந்த திரைப்படத்தில் வடிவேலு, கிரண் ரத்தோட், ரியாஸ் கான், எம். என்.நம்பியார், நிரோஷா, எம்.என்.ராஜம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.

காலங்கள் கடந்தும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நல்ல காமெடி படமாக இந்த படம் இருந்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இந்த படத்தின் இயக்குனர் சுந்தர் சி படத்தை தான் காப்பி அடித்து எடுத்ததாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” வின்னர் படத்தை இயக்குவதற்கு முன்பு தயாரிப்பாளர் என்னிடம் ஒரு கேசட் கொடுத்து இதில் நிறைய தெலுங்கு படம் இருக்கிறது நீங்கள் இதனை பார்த்துவிட்டு எதாவது படம் பிடித்து இருந்தால் சொல்லுங்கள் நாம் ரீமேக் செய்யலாம் என்று கூறினார். நான் அந்த படங்களை பார்த்தவுடன் ரொம்பவே அதிர்ச்சியாகிவிட்டேன். ஏனென்றால், என்னுடைய படத்தை பார்த்து அப்படியே படத்தை எடுத்து வைத்து இருந்தார்கள்.

இதனால் எனக்கு ரொம்பவே கோபம் வந்துவிட்டது. என்னுடைய படத்தை காப்பி அடித்து எடுத்த அந்த இயக்குனர் மீது கோபம் வரவில்லை மொத்தமாகவே தெலுங்கு சினிமா மீதே கோபம் வந்துவிட்டது. என்னுடைய 3 படத்தை காப்பி அடிச்சு எடுத்து வைத்துவிட்டீர்களா? நான் உங்களை பழி வாங்குறேன் என்று தான் வின்னர் படத்தை எடுத்தேன்.

வின்னர் படத்தை தெலுங்கு படங்களை பார்த்து தான் காப்பி அடித்து எடுத்தேன். 4 படங்களை காப்பி அடித்து எழுதிய படம்தான் ‘வின்னர்’. ஹீரோவை ஹீரோயின் அடி வாங்க வைப்பது போல ஒரு படத்தில் இருந்த காட்சியை அப்படியே வைத்தால் சரியாக இருக்காது என்பதால் ‘இதோ வந்துட்டேன்’ என வடிவேலு குறுக்கே வந்து விழும் காட்சியை எடுத்தேன்.

நான் தெலுங்கில் இருந்து காப்பி அடித்ததை, அப்படியே காப்பி அடித்து வேறொரு தெலுங்கு படத்தில் வைத்துவிட்டார்கள். அப்போது என்னுடைய தோல்வியை நான் ஒப்புக்கொண்டேன். பழிவாங்குவதிலும் தோல்வி அடைந்துவிட்டேன்” எனவும் இயக்குனர் சுந்தர் சி கலகலப்பாக பேசியுள்ளார். மேலும் சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 படம் வரும் மே 3- தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago