[file image]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். எனவே, மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள லியோ படத்திற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், அக்.19ம் தேதி வெளியாகவுள்ள லியோ” படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, வரும் 19ம் தேதி அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 20, 21, 22, 23, 24 ஆகிய தினங்களில் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 19 முதல் 24ம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட திரையரங்குகளில் ஒருநாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில், தற்போது சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…