சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் ‘விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். விசாகா கமிட்டி என்பது, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கும், விசாரணைகள் மேற்கொள்வதற்கும், தீர்வுகள் காணவும் அமைக்கப்படும் ஒரு குழு ஆகும். இந்த குழுவே பல கல்லூரிகளில் மற்றும் தொழில் நிறுவனங்களில் செயல்படுகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது. அதன் வெளிப்பாடு தான் சென்னை பல் மருத்துவ கல்லூரியில் விசாகா கமிட்டி […]
சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஏற்கனவே 30 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில் தற்போது இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு ஏற்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தால் எழுப்பப்பட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் சாம்சங் இந்தியா நிர்வாகத்தினர் மற்றும் CITU தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதில், இருதரப்பும் ஏற்றுக்கொண்டவாறு பின்வரும் […]
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று மாலை தூத்துக்குடி சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றில் வேன் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர், இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகளை ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த உத்தரவு […]
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு 10-வகுப்பு போது தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருந்த நிலையில், இன்று வெளியானது. எப்படி பார்க்கலாம்? மாணவர்கள் தங்கள் முடிவுகளை பின்வரும் இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் www.results.digilocker.gov.in , https://tnresults.nic.in/ அதைப்போலவே, மாணவர்கள் பதிவு செய்த செல்போன் […]
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத் தேர்வுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 4,107 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இதில் சுமார் 9.10 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இவர்களில் 4,57,525 ஆண்களும், 4,52,498 பெண்களும், ஒரு மாற்றுப் பாலினத்தவரும் அடங்குவர். மேலும், 28,827 தனித்தேர்வர்களும் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வு எழுதிய அனைவரும் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த […]
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த தேர்வுக்கான முடிவுகள் எப்போது மாணவர்கள் காத்திருந்த நிலையில், அதனைப்பற்றி சிறிய தகவலும் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே, +2 (HSE +2) பொதுத் தேர்வு முடிவுகள் விரைவாகவே அதாவது மே 8, 2025 அன்று வெளியானது. அதைப்போலவே, 10ஆம் வகுப்பு பொது தேர்வுகளின் முடிவுகளும் விரைவாகவே வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை […]
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டு வணிகர்களுக்கு மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ” தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய வணிகர்களுக்கு ‘ வணிகர் நாள்’ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வணிகர்களின் கோரிக்கையை ஏற்று மே 5-ம் தேதியை ‘வணிகர் நாள்’ என்ற அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றார். மேலும், […]
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா – தருண் தன்ராஜ் ஆகியோரின் திருமணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்தினார். இதையடுத்து மேடையில் பேசிய அவர், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். அதுதான் எனது வேண்டுகோள் என கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், ”200 அல்ல.. 220 அல்ல.. 234 தொகுதிகளிலும் வெல்வோம். அதில் ஆச்சரியமில்லை. எதிர்க்கட்சியினர் எத்தகைய கூட்டணி வைத்து […]
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து ப்ரெட் ஆம்ப்லேட் சாப்பிடுவது வரை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், ஒரு சில இடங்களில் மயோனைஸ் சரியான முறையில் தயார் செய்யப்படவில்லை என்றும்…ஒரு சில இடங்களில் பழைய மயோனைஸ் திரும்ப பயன்படுத்தப்பட்டு வருவதால் உடல் நிலைகுறைபாடு ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. எனவே, மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முறையற்ற வகையில் […]
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். புதிய திருத்தத்தின் கீழ் வக்பு வாரியத்தில் பரந்த பிரதிநிதித்துவம் இருக்கும். வாரியத்தில் பெண்கள் கட்டாயம் உறுப்பினர்களாக இருப்பார்கள். இப்போது ஷியா, சன்னி, போஹ்ரா, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், பெண்கள், முஸ்லீம் அல்லாதவர்கள் ஆகியோரும் வக்பு வாரியத்தில் இருப்பார்கள். வக்பு திருத்த மசோதா 2025 உடன் வக்பு (ரத்து) மசோதா 2024-வையும் […]
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1 தேர்வை நடத்தி, தமிழ்நாடு அரசின் உயர்நிலைப் பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை இன்று (ஏப்ரல் 1) வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் துணை ஆட்சியர் (Deputy Collector), துணை காவல் கண்காணிப்பாளர் (Deputy Superintendent of Police), உதவி ஆணையர் (Assistant Commissioner) போன்ற உயர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு […]
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) முடிவின்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 புதிய சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவை செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு (மார்ச், 31) […]
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர் செரியன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, கேள்வி நேரம் தொடங்கும். அதன் பின் அதிமுக சார்பில் சபாநாயகர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு கோரப்படலாம். உடனடியாக அதை ஏற்கும்பட்சத்தில் துணை சபாநாயகர் அவையை வழிநடத்திச் செல்வார். தனியார் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்த பலதடவை முயற்சி […]
சென்னை : மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா சுமை பயணச்சீட்டை வழங்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் 100 கி.மீ வரை, மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 25 கிலோ வரையிலான பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது. விற்பனைப் பொருட்களின் சுமைக் கூலியை கொடுக்க முடியாமல் தவித்த மகளிர் சுய […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள் பொதுக்கூட்டங்களும், நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர். இந்நிலையில், தனது பிறந்தநாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று வீடியோ ஒன்றிய வெளியிட்டுள்ளார். அதில், “தமிழையும் தமிழர்களின் உரிமைகளையும் பாதுகாக்க, திமுக ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்தால் இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் அஞ்சுகிறார்கள், அலறுகிறார்கள். நம்மை நோக்கி தேசவிரோதிகள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். […]
அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, திடீரென சென்னையில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். நேற்றிரவு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் பேசிய நடிகர் வடிவேலு, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூத்த மகனாக உள்ளார் முதல்வர் ஸ்டாலின். வெற்றி திருமகள் முதல்வர் ஸ்டாலினை எந்நேரமும் பற்றிக்கொண்டிருக்கிறாள் என்பது நன்றாக தெரிகிறது. எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின்தான் வென்று ஆட்சியில் அமர்வார். 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க […]
நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், ரூ.9,368 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைப்பதுடன், டாடா சோலார் தொழிற்சாலையையும் திறந்துவைக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பின்னர் கார் மூலம் காலை திருநெல்வேலிக்கு செல்கிறார். அங்கு அவருக்கு நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் முன்னிலையில் […]
சென்னை : மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி) தோட்டத்தில் நாதுராம் கோட்ஸேவால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாள் இன்று. இந்த நாளில், சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளையும் நினைவுகூர்ந்து, தியாகிகள் தினமாக சிறப்பு செய்கிறோம். தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுட்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, […]
சென்னை : கோயம்புத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தொழில்முனைவோருக்கான “ChatGPT” என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு வரும் 31.01.2025 தேதி நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு, ChatGPT-ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியில் இடம் பெறும் தலைப்புகள் […]
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாப்பட்டி மக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அது மட்டும் இல்லாமல், இது மதுரை மக்களுக்கு கிடைத்த […]