Tag: #TNGovt

”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா – தருண் தன்ராஜ் ஆகியோரின் திருமணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்தினார். இதையடுத்து மேடையில் பேசிய அவர், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். அதுதான் எனது வேண்டுகோள் என கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், ”200 அல்ல.. 220 அல்ல.. 234 தொகுதிகளிலும் வெல்வோம். அதில் ஆச்சரியமில்லை. எதிர்க்கட்சியினர் எத்தகைய கூட்டணி வைத்து […]

#DMK 3 Min Read
mk stalin

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து ப்ரெட் ஆம்ப்லேட் சாப்பிடுவது வரை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், ஒரு சில இடங்களில் மயோனைஸ் சரியான முறையில் தயார் செய்யப்படவில்லை என்றும்…ஒரு சில இடங்களில் பழைய மயோனைஸ் திரும்ப பயன்படுத்தப்பட்டு வருவதால் உடல் நிலைகுறைபாடு ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. எனவே, மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முறையற்ற வகையில் […]

#TNGovt 5 Min Read
mayonnaise

வக்பு வாரிய திருத்த சட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். புதிய திருத்தத்தின் கீழ் வக்பு வாரியத்தில் பரந்த பிரதிநிதித்துவம் இருக்கும். வாரியத்தில் பெண்கள் கட்டாயம் உறுப்பினர்களாக இருப்பார்கள். இப்போது ஷியா, சன்னி, போஹ்ரா, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், பெண்கள், முஸ்லீம் அல்லாதவர்கள் ஆகியோரும் வக்பு வாரியத்தில் இருப்பார்கள்.  வக்பு திருத்த மசோதா 2025 உடன் வக்பு (ரத்து) மசோதா 2024-வையும் […]

#TNGovt 5 Min Read
CM MK Stalin writes to PM Modi

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1 தேர்வை நடத்தி, தமிழ்நாடு அரசின் உயர்நிலைப் பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை இன்று (ஏப்ரல் 1) வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் துணை ஆட்சியர் (Deputy Collector), துணை காவல் கண்காணிப்பாளர் (Deputy Superintendent of Police), உதவி ஆணையர் (Assistant Commissioner) போன்ற உயர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு […]

#Exam 3 Min Read
TNPSC Group 1 Mains Exam

சுங்கச்சாவடி கட்டண உயர்வு இன்று முதல் அமல்.! வாகன ஓட்டிகள் அதிருப்தி…

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.  இது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) முடிவின்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 புதிய சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவை செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு  (மார்ச், 31) […]

#TNGovt 3 Min Read
Tollgate tn

LIVE : தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் முதல்… பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி கருத்து வரை.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர் செரியன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, கேள்வி நேரம் தொடங்கும். அதன் பின் அதிமுக சார்பில் சபாநாயகர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு கோரப்படலாம். உடனடியாக அதை ஏற்கும்பட்சத்தில் துணை சபாநாயகர் அவையை வழிநடத்திச் செல்வார். தனியார் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்த பலதடவை முயற்சி […]

#ADMK 2 Min Read
appavu - pm modi

‘மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்களுக்கு கூடுதல் சலுகை’ – தமிழக அரசு உத்தரவு.!

சென்னை : மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா சுமை பயணச்சீட்டை வழங்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் 100 கி.மீ வரை, மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 25 கிலோ வரையிலான பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது. விற்பனைப் பொருட்களின் சுமைக் கூலியை கொடுக்க முடியாமல் தவித்த மகளிர் சுய […]

#TNGovt 3 Min Read
TamilNadu - BUS - WOMEN

தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள் பொதுக்கூட்டங்களும், நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர். இந்நிலையில், தனது பிறந்தநாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று வீடியோ ஒன்றிய வெளியிட்டுள்ளார். அதில், “தமிழையும் தமிழர்களின் உரிமைகளையும் பாதுகாக்க, திமுக ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்தால் இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் அஞ்சுகிறார்கள், அலறுகிறார்கள். நம்மை நோக்கி தேசவிரோதிகள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். […]

#DMK 6 Min Read
MKStalin

“2026 தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்”- நடிகர் வடிவேலு.!

அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, திடீரென சென்னையில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். நேற்றிரவு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் பேசிய நடிகர் வடிவேலு, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூத்த மகனாக உள்ளார் முதல்வர் ஸ்டாலின். வெற்றி திருமகள் முதல்வர் ஸ்டாலினை எந்நேரமும் பற்றிக்கொண்டிருக்கிறாள் என்பது நன்றாக தெரிகிறது. எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின்தான் வென்று ஆட்சியில் அமர்வார். 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க […]

#DMK 3 Min Read
Chief Minister Stalin Vadivelu

பல்வேறு திட்டங்களை திறந்து வைக்க இன்று நெல்லை செல்கிறார் மு.க.ஸ்டாலின்.!

நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், ரூ.9,368 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைப்பதுடன், டாடா சோலார் தொழிற்சாலையையும் திறந்துவைக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பின்னர் கார் மூலம் காலை திருநெல்வேலிக்கு செல்கிறார். அங்கு அவருக்கு நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் முன்னிலையில் […]

#MKStalin 4 Min Read
mk stalin nellai

LIVE : மகாத்மா காந்தி நினைவு தினம் முதல் தமிழ்நாடு அரசு போட்ட உத்தரவு வரை!

சென்னை  : மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி) தோட்டத்தில் நாதுராம் கோட்ஸேவால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாள் இன்று. இந்த நாளில், சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளையும் நினைவுகூர்ந்து, தியாகிகள் தினமாக சிறப்பு செய்கிறோம். தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுட்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, […]

#TNGovt 2 Min Read
Mahatma Gandhi - TN govt

தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு… ‘ChatGPT’ பற்றிய தமிழக அரசின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு!

சென்னை :  கோயம்புத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தொழில்முனைவோருக்கான “ChatGPT” என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு வரும் 31.01.2025 தேதி நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு, ChatGPT-ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியில் இடம் பெறும் தலைப்புகள் […]

#MSME 5 Min Read
chat gpt- tn govt

டங்ஸ்டன் திட்டம் ரத்து: ‘தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி’… அரசியல் தலைவர்கள் வரவேற்பு.!

சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாப்பட்டி மக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அது மட்டும் இல்லாமல், இது மதுரை மக்களுக்கு கிடைத்த […]

#AIADMK 12 Min Read
Tungsten madurai

“மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் அமையவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டங்ஸ்டன் திட்டத்தால், பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமான அரிட்டாபட்டி முழுமையாக அழியும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசின் அர்ப்பணிப்பு மற்றும் இப்பகுதியின் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டங்ஸ்டன் விவகாரத்தில் மக்களின் உணர்வுக்கும், […]

#AIADMK 4 Min Read
mk stalin

பொங்கல் சிறப்பு பரிசு: 3186 காவலர்களுக்கு பதக்கங்கள் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு “தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்” வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் […]

#MKStalin 6 Min Read
tn police

கிராம சபைக் கூட்டம் எப்போது? தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கிராம சபைக் கூட்டம் மதச்சார்புள்ள எந்த வளாகத்திலும் நடத்தக் கூடாது. கூட்டம் நடக்கும் இடத்தை முன்கூட்டியே கிராம மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “குடியரசு தினத்தன்று (26.01.2025) அனைத்து கிராம நடத்தப்பட வேண்டும். கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் […]

#GramaSabha 4 Min Read
Gramasabha TNgovt

‘3 மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை’ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில், ரூ.1,000 கோரி புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய காந்திராஜன், […]

#MagalirUrimaiThittam 4 Min Read
kalaignar Magalir Urimai Thogai

LIVE: தமிழகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முதல் திரையரங்குகளில் கட்டண உயர்வு வரை.!

சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் முதல் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியயிட்டது. ஏசி அல்லாத திரையரங்குகளில் 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாகவும், ஏசி திரையரங்குகளுக்கு 4 ரூபாயில் இருந்து 6 ரூபாயாகவும் […]

#TNGovt 2 Min Read
tamil live news

ஓட்டுநர் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்களுக்கு சஸ்பெண்ட் – போக்குவரத்துத் துறை!

சென்னை: தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால், 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. வாகனம் ஓட்டும் பொழுது, செல்போன் பேச கூடாது, மது அருந்த கூடாது என சாலை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அவ்வாறு செய்வதினால், சில நேரங்களில் விபத்துகளும் நடக்கின்றன. ஆனால், அரசு பேருந்து ஓட்டுனர்கள் செல்போனை பார்த்தபடியும், அதில் தீவிரமாக பேசியபடியும் வாகனத்தை இயக்குவதாக பயணிகள் புகார்கள் அளித்திருந்த நிலையில், போக்குவரத்துத் துறை […]

#TNGovt 3 Min Read
BusDriver

திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம்! ரூ.290 கோடி நிதி ஒதுக்கீடு…அரசாணை வெளியீடு!

திருச்சி : மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பெயரிலான நூலகத்தை திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை முதல்வர் வழங்கியதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் வலைத்தள பக்கதில் நன்றியும் தெரிவித்து இந்த திட்டத்திற்கான அரசு ஆணையையும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் […]

#MKStalin 7 Min Read
karunanidhi mk stalin