தலைவர் 169 படத்தை இயக்குகிறீர்களா என்ற கேள்விக்கு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி பதிலளித்துள்ளார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. முதல் திரைப்படமே வெற்றி திரைப்படமாக அமைந்தது, இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் மேலும் சில சினிமா பிரபலங்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
அந்த வகையில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி வீட்டிற்கு அழைத்து பாராட்டினார். அப்போதிலிருந்து தற்போதுவரை ரஜினியின் 169- வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது.
சமீபத்தில் கூட தலைவர் 169 படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளது உறுதியாகிவிட்டதாகவும், படத்தை AGS நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது.
இந்நிலையில், கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தை பார்க்க வந்த தேசிங்கு பெரியசாமியிடம் தலைவர் 169 படத்தை இயக்குகிறீர்களா..? என்ற கேள்வி கேட்கப்பட்டது.. அதற்கு பதிலளித்த அவர்.. தெரியல நடந்தால் நன்றாக தான் இருக்கும்.. ரசிகர்கள் எடிட் செய்யும் போஸ்டர்களை பார்க்கிறேன் சந்தோசமாக இருக்கிறது…அடுத்து என்ன படம் இயக்க போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.. இன்னும் 2 மாதம் அல்லது மூன்று மாதங்களில் முடிவு செய்துவிடுவோம்..” என்று கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…