Thalapathy 68 [FILE IMAGE]
மும்பை விமான நிலையத்தில் நடிகர் சூர்யாவை சந்தித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. இருவரும் சந்தித்து கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
சூர்யா கங்குவா திரைப்படத்தில் தனது போர்ஷன்களை முடித்துக்கொண்டு விடுமுறைக்காக வெளிநாடு சென்றதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக வெளிநாட்டில் இருக்கும் அவரது புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி வைரலானது. ஆனால், அவர் வெளிநாட்டில் வீடு திரும்பினாரா அல்லது கங்குவா படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக பாங்காங் சொல்கிறாரா என்று தெரியவில்லை.
இந்த நிலையில், தளபதி 68 படத்திற்கான முக்கிய பணிக்காக அமெரிக்கா சென்ற இயக்குனர் வெங்கட் பிரபு, அந்த வேலைகளை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியுள்ளார் போல் தெரிகிறது. அப்பொழுது, மும்பை வந்துள்ள வெங்கட் பிரபு சூர்யாவை சந்தித்துள்ளார் போல் தெரிகிறது. அவருடன் எடுத்துக்கொண்ட செல்பியை பகிர்ந்துள்ளார் .
தற்பொழுது, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கையில், வெங்கட் பிரபு ‘சும்மா இருக்கும் சங்க ஊதி கெடுப்பது போல்’ இருக்கிறது. அட ஆமாங்க…. சும்மாவே தளபதி 68 திரைப்படத்தில் பல பிரபலங்கள் நடிக்கிறார்கள் என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குழப்பி வருகிறார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…