Categories: சினிமா

தமிழுக்காக போராடும் ஜிவி பிரகாஷ்! மெய் சிலிர்க்க வைத்த ‘ரெபெல்’ டீசர்!

Published by
பால முருகன்

இசையமைப்பாளராக ஒரு பாக்கம் கலக்கி வரும் ஜிவி பிரகாஷ் நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கி வருகிறார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான அடியே திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ‘ரெபெல்’  என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தினை நிகேஷ்.ஆர்.எஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் மமிதா பைஜு, வெங்கடேஷ்.வி.பி, ஷாலு ரஹீம், கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், சுப்ரமணிய சிவா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்  தான் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கான டீசர் இன்று வெளியாகும் எனவும், அதனை சூர்யாவே வெளியிடுவார் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து, தற்போது படத்திற்கான டீசர் வெளியாகியுள்ளது.

டீசரில் தமிழுக்காக போராடி இறந்தவர் ஒருவர் இருக்கிறார் என்ற வசனம் வந்தவுடன் ஜிவி பிரகாஷ் வருகிறார். எனவே, டீசரை வைத்து பார்க்கையில் அவர் படத்தில் தமிழுக்காக போராடுபவராக நடித்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த திரைப்படமும், ஜிவி பிரகாஷிற்கு வெற்றி படமாக இருக்கும் என தெரிகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

19 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

40 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

54 minutes ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

3 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

4 hours ago