Categories: சினிமா

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவரா?

Published by
பால முருகன்

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. 82 நாட்களை கடந்து இருக்கும் நிலையில், போட்டி கடுமையாக கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் அனைவரும் சுறு சுறுப்பாக விளையாடி வருகிறார்கள். வாரம் வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் எலிமினேஷனும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு கூல் சுரேஷ் வெளியேறினார்.

அவரை தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறியுள்ளார் என்ற தகவல் கிடைத்து இருக்கிறது. இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் விசித்ரா, ரவீனா, சரவண விக்ரம் ஆகியோர் இடம்பெற்று இருந்தார்கள். இவர்களில் யார் குறைவான மக்கள் வாக்குகளை பெற்று இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

தனுஷுக்கு டஃப் கொடுத்த நிக்சன்! பிக் பாஸ் வீட்டில் அசத்தல் நடனம்!

இதனையடுத்து, தற்போது நம்பத்தக்க வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி, இந்த வாரம் குறைவான மக்கள் வாக்குகளை பெற்று சரவண விக்ரம்  தான் வீட்டை விட்டு வெளியேறியுள்ளாராம். அவர் வீட்டை விட்டு வெளியேறிய அந்த எபிஷோட் நாளை (ஞாயிற்றுக் கிழமை) ஒளிபரப்பாகும் எனவும் கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் பலருக்கும் பிடித்த போட்டியாளராக இருந்த இவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளியான தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான சரவண விக்ரமுக்கு இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து இந்த நிகழ்ச்சி அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. எனவே, அவர் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு ஜோவிகாவுக்கு பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

3 hours ago

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

3 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

4 hours ago

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…

5 hours ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…

5 hours ago

பிளே ஆப் சென்ற மும்பை….. டெல்லியை வீழ்த்தியதற்கு முக்கிய காரணங்கள் இதுதான்!

மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…

5 hours ago