sivakarthikeyan vs jayam ravi [file image]
பிரதர்: நடிகர் ஜெயம் ரவி முக்கிய வேடத்தில் நடித்து வெளிவரவிருக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளிவரவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார்.
ஒரு பொழுதுபோக்கு குடும்ப படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன், ஜெயம் ரவிக்கு மனைவியாக நடித்துள்ளார் போல் தெரிகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருப்பதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
அந்த போஸ்டரில் பிரியங்கா அருள் மோகன் மற்றும் ஜெயம் ரவி கழுத்தில் மாலையுடன் இருக்கின்றனர். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
படத்தில் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா அருள் மோகன் தவிர, இப்படத்தில் பூமிகா சாவ்லா, வி.டி.வி கணேஷ், நட்ராஜ் சுப்ரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ்.பாஸ்கர், சுரேஷ் சக்ரவர்த்தி, விருத்தி விஷா, மாஸ்டர் அஷ்வின் ஆகியோர் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் vs ஜெயம் ரவி :
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது நடிகர் ஜெயம் ரவி நடித்திருக்கும் ‘பிரதர்’ திரைப்படமும் அன்றைய தினம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பாக்ஸ் ஆபிஸில் போட்டி நிலவும் என தெரிகிறது.
இவர்கள் இருவரின் திரைப்படம் திரையரங்குளில் ஒன்றாக மோதுவது இதுவே முதல் முறை. பிரதர் ஒரு குடும்ப படம் என்பதால், குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும், அதே வேலையில் அமரன் கதை களம், காஷ்மீர் தீவிர வாதத்தால் பலியான தமிழக ராணுவ வீரனை பற்றியது. என்ன நடக்க போகிறது என்று பொருத்திருந்து பார்க்கலாம்.
தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…
சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…
சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…
குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…