சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா உலகில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ராஜேஷ் இந்த மண்ணைவிட்டு மறைந்த நிலையில், அவருடைய உடல் அவர் உயிரோடு இருந்த சமயத்தில் தனக்கு தானே கட்டி வைத்திருந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. ராஜேஷ் தனது 40ஆவது வயதில் சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு அருகே கல்லறை கட்டியது, அவரது வாழ்க்கையில் […]
சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமான நடிகர் ராஜேஷின் (75) உடல் இன்று நல்லடக்கம் செய்யப்டுகிறது. முன்னதாக, 2-ம் தேதி இறுதிசடங்கு நடக்க இருப்பதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், சென்னை கீழ்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமாபுரத்தில் உள்ள ராஜேஷ் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் மோகன், சரவணன், தியாகராஜன், விஷால், சின்னிஜெயந்த், கவிஞர் வைரமுத்து, நடிகை வடிவுக்கரசி உள்ளிட்டோர் […]
சென்னை : நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னையிலுள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவு செய்தியை கேட்ட உடன், விசிக தலைவர் திருமாவளவன், முதல் ஆளாக நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, சினிமா பிரபலங்கள் ஒவ்வொருவராக நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்பொழுது, மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், […]
சென்னை : பிரபல நடிகர் ராஜேஷ் (75) சற்றுமுன் காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். பிரபலங்களுடன் தனது நினைவுகளை கட்டுரையாக எழுதி வந்த 75 வயதான ராஜேஷ் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு இன்று காலமானார். ராமாபுரத்தில் உள்ள வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, நடிகர் ராஜேஷ் மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் […]
பிரதர்: நடிகர் ஜெயம் ரவி முக்கிய வேடத்தில் நடித்து வெளிவரவிருக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளிவரவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். ஒரு பொழுதுபோக்கு குடும்ப படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன், ஜெயம் ரவிக்கு மனைவியாக நடித்துள்ளார் போல் தெரிகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருப்பதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் […]
ஆலக்காடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவரை திருத்துறைப்பூண்டி அருகே தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், ஆலக்காடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவரை திருத்துறைப்பூண்டி அருகே தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். இந்நிலையில், ராஜேஷின் தலையை ஓரிடத்திலும், உடலை ஓரிடத்திலும் இருந்து போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், போலீசார் விசாரணையில், ராஜேஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த ராஜேஷுக்கு […]
அருண் விஜயின் 33 வது திரைப்படத்தில் நடிகர் ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இது அவருக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக […]
ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷின் பேச்சு ஆபத்தான பேச்சு. கடந்த 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 37 பேர் உட்பட நாடு முழுவதும் 350-கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியதால், தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றுமாறு கோரியுள்ளனர். தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது […]
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரை சார்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சீமா. கணவர் ராஜேஷ் உடன் சீமாவிற்கு வாழ பிடிக்காமல் அதே பகுதியே சார்ந்த உமேஷ் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இதனால் ராஜேஷ் தந்தை கிராம பஞ்சாயத்தில் இழப்பீடு வேண்டும் என கோரிக்கை வைத்தார்.உடனடியாக கிராம பஞ்சாயத்தார் சீமா மற்றும் உமேஷ் உடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கிராம பஞ்சாயத்தாரிடம் தான் உமேஷ் உடன் வாழ விரும்புவதாக கூறினார். இதனால் இழப்பீடாக உமேஷ் வளர்ந்து வரும் […]