நடிகர் ராஜேஷ் மறைவு – திருமா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.!
உடல் நலக்குறைவால் உயிரிழந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை : நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னையிலுள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவு செய்தியை கேட்ட உடன், விசிக தலைவர் திருமாவளவன், முதல் ஆளாக நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, சினிமா பிரபலங்கள் ஒவ்வொருவராக நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்பொழுது, மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
முன்னதாக, நடிகர் ராஜேஷ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்ததாக அவர் கூறியுள்ளார். கலைஞர் மீது அளவற்ற மரியாதையும், அன்பும் கொண்டு விளங்கினார். திரைத்துறையில் அவரது நீண்ட அனுபவத்தைக் கருத்தில்கொண்டு. கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக அவரை நியமித்தோம்.
ராஜேஷ், கலைஞரும், ராஜேஷ் திருமணம் முதலிய இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வாழ்த்துவது வழக்கம் என்றும், தலைவர் கலைஞர் அவர்கள் மறைவுற்றபோது, “தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களிலும் அவர் ஓர் அங்கம்” என நெகிழ்ச்சியோடு பேசி தனது இரங்கலைத் தெரிவித்தவர் ராஜேஷ் என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். ராஜேஷ் மறைவினால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என அவர் கூறியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் திரு. ராஜேஷ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
அவரது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார். pic.twitter.com/g6w4rX3exw
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 29, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
மாறியது பாமக அலுவலக முகவரி…அன்புமணி ராமதாஸ் அதிரடி!
May 30, 2025