சினிமா

பிக் பாஸ் என்றாலே இதுதான் சுவாரசியம்! நடிகர் ஹரிஷ் கல்யாண் பேச்சு!

Published by
பால முருகன்

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக ஓடி வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக 7-வது சீசன் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மற்ற சீசன்களை போல இந்த சீசன் இல்லை என்றே கூறலாம்.

குறிப்பாக இந்த சீசனில் வீடு இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டு வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. எது என்னவென்றால் பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றிய சம்பவம் தான்.

இந்த 7-வது சீசனில் அவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும் நிலையில், அவர் வெளியேறியது தெரிந்தவுடன் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள். பிரதீப் ஆண்டனி வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களை தர குறைவாக பேசிய காரணத்தால் அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டினால் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு அவர் வெளியேறினார்.

இருந்தாலும் உண்மையாக தன்னுடைய மனதிற்கு தோன்றுவதை வெளிப்படையாக பேசி மற்ற போட்டியாளர்களுக்கு சவாலான போட்டியாளராக வீட்டிற்குள் இருந்த அவர் வீட்டை விட்டு வெளியேறியது விமர்சனத்துக்குள்ளாகியள்ளது. இதற்கு இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய ஹரிஷ் கல்யாண் ” நான் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருக்கிறேன். மற்ற சீசன்களை போல இந்த சீசனும் நன்றாக இருக்கிறது. இந்த சீசன் நிகழ்ச்சியில் இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டு இருப்பது பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. இந்த மாதிரி இரண்டு வீடுகளாக பிக் பாஸ் பிரிக்கப்பட்டால் கண்டிப்பாக சண்டை வரத்தான் செய்யும்.

அது மட்டுமில்லை பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைகள் வருவது தான் சுவாரசியம். சண்டைகள் வந்தால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும்போது ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும்” என ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நான் அடுத்ததாக டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறேன். விரைவில் என்னுடைய படங்களின் அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

58 minutes ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

2 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

3 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

3 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

3 hours ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

4 hours ago