நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுமிதா பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த மதுமிதா தாலியை கழற்றி வைத்துவிட்டு வந்தது பலரின் சர்ச்சைபேச்சிற்கு உள்ளானது.
இது குறித்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மதுமிதா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் எனது பொருள்களை செக் செய்தார்கள். அப்போது தாலி போன்ற பெரிய நகைகளை அணிந்தால் அது மைக்கில் உரசும், தாலியை அணிய வேண்டாம் என்று கூறியதாக கூறியுள்ளார்.
தாலியை எப்படி கழற்ற முடியும் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் டாஸ்க் செய்யும் போது யாராவது உங்கள் தாலியை பிடித்து இழுத்து அறுந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளார்கள். இதுகுறித்து தனது அவர் கணவரிடம் கேட்க அவரும் சரி என்ற பிறகே தாலியை கழற்றினேன் என பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…