sundar c about Daughters [Image source : file image]
இயக்குனர் சுந்தர் சி தற்போது தலைநகரம் 2 திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எனவே, படத்தின் ப்ரோமோஷன் பணியில் இயக்குனர் சுந்தர் சி ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், படத்தின் ப்ரோமோசனுக்காக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுந்தர் சி ஹீரோயின்களுடன் ரோமன்ஸ் செய்தால் தனது மகள்களுக்கு பிடிக்காது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய சுந்தர் சி “நான் தலைநகரம் முதல் பக்கத்தில் நடித்த போது என்னுடைய மகள் ரொம்ப சிறிய பொண்ணு. ஒரு 5 வயது இருக்கும் என்னுடைய மூத்த மகளுக்கு அப்போது, தலைநகரம் படம் வெளியான போது அதில் சில காட்சிகளில் ஹீரோயின்களை பிடிப்பது போல காட்சிகள் இருக்கும்.
அந்த படத்தை பார்த்த போது என்னுடைய மகள் “ஐயோ ச்சீ அப்பா” எதற்கு அவுங்கள தொடுறாங்க என கேட்பார். அப்போதிலிருந்து இப்போது வரை என்னுடைய மகள்களுக்கு ஹீரோயின்களை தொட்டாலே பிடிக்காது. ஹீரோயின்களை தொட்டால் அவ்வளவுதான்” என கூறியுள்ளார்.
மேலும், இயக்குனர் சுந்தர் சி தலைநகரம் 2 திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அரண்மனை 4 படத்தை அவரே இயக்கி அவரே நடித்து வருகிறார். படத்தில் அவருடன் இணைந்து யோகி பாபு, ராஷி கண்ணா, கோவை சரளா., ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…