வடசென்னை 2 அவ்வளவுதான்! வெற்றிமாறன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Published by
பால முருகன்

Vada Chennai 2 : வடசென்னை 2 அவ்வளவு தான் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் கண்டிப்பாக வடசென்னை 2 படம் இருக்கும் என்றே சொல்லலாம். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வடசென்னை. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரூ ஜெர்மி, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர் குமார் ஜி, பாவெல் நவகெரேதன், ராதா ரவி உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.

கேங்ஸ்டர் கதை அம்சத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. முதல் பாகம் முடியும்போதே படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டும் இருந்தது. எனவே, இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

இருந்தாலும் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் பிரமாண்டமாக எடுக்கவேண்டும் என்ற காரணத்தால் பொறுமையாக அதற்கு என்று தனி நேரம் ஒதுக்கி தான் எடுக்க முடியும். ஆனால், வெற்றிமாறனும் தனுஷும் தாங்கள் கமிட் ஆகியுள்ள படங்களில் பிசியாக இருப்பதாலே இன்னும் வடசென்னை 2 குறித்த திட்டமும் தொடங்கப்படாமல் இருக்கிறது.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் வடசென்னை 2 குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” வடசென்னை 2 படம் ஆரம்பம் ஆக இன்னும் காலங்கள் ஆகும். அடுத்ததாக வாடிவாசல் இருக்கிறது அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதனை பார்க்கவேண்டும். வடசென்னை 2 அவ்வளவு தான் அவ்வளவு என்றால் அவ்வளவு தான்”  என கூறியுள்ளார். வடசென்னை 2 இனிமேல் எடுக்கப்பட வாய்ப்பு இல்லை என்பதை சூசகமாக அவர் கூறியுள்ளது ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

இந்தியா போட்டியை நீங்க பாத்துக்கோங்க…நான் BBL போறேன்! இங்கிலாந்துக்கு டாடா சொன்ன ஆர்ச்சர்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…

25 minutes ago

அடுத்தடுத்து கோளாறாகும் ஏர் இந்தியா விமானங்கள்? பதற்றத்தில் பயணிகள்!

கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…

59 minutes ago

டெஹ்ரானில் இருந்து உடனடியாக அனைவரும் வெளியேறுங்கள்! அலர்ட் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!

இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…

1 hour ago

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

2 hours ago

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…

11 hours ago

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

11 hours ago