Vijay Sethupathi viduthalai [File Image]
நடிகர் விஜய் சேதுபதி வெளியில் தெரியாமல் பல உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார். இவர் செய்யும் உதவிகள் பற்றிய தகவல்கள் அடிக்கடி வெளிவருவதும் உண்டு. இதனால் அவருடைய ரசிகர்கள் அவரை பாராட்டுவதும் உண்டு. அந்த வகையில், விஜய் சேதுபதி சமீபத்தில் செய்த பெரிய உதவி பற்றிய தகவல் ஒன்றை இயக்குனரும், பெப்சி தலைவருமான ஆர்கே செல்வமணி கூறியுள்ளார்.
பெப்சி யூனியனில் பணிபுரியும் 250 பேருக்கு வீடு கட்ட பண பிரச்சனை இருந்தபோது. அவர்களுக்கு விஜய் சேதுபதி தலா 50,000 விதம் 1 கோடியே 40 லட்சம் கொடுத்து அவர் பெரிய உதவியை செய்துள்ளார். ஆர்கே செல்வமணியை விஜய் சேதுபதி சந்தித்தபோது உங்களுக்கு எண்ணவேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு ஆர்கே செல்வமணி பீல்டிங் கட்டுவதற்கு 1 கோடி 40 லட்சம் வேண்டும் என்று கேட்க அதற்கு விஜய் சேதுபதி நான் ஒரு விளம்பர படத்தில் நடித்து கொண்டு இருக்கிறேன். அதில் இருந்து 1 கோடி 10 லட்சம் சம்பளம் வரும் அதை நீங்களே வாங்கிகொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம்.
மேலும், 30 லட்சம் குறைவாக இருப்பதை அறிந்த அவர் உடனே அந்த தொகையும் கொடுத்து உதவியுள்ளார். இதற்கு நன்றியும் தெரிவித்து இந்த விஷயத்தை மக்களுக்கு சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் ஆர்கே செல்வமணி தெரிய வைத்துவிட்டார். 250 குடும்பங்களுக்கு பெரிய உதவி செய்த விஜய் சேதுபதியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…