சினிமா

அற்புதமாக அட்வைஸ் செய்த விஜயகாந்த்! துளி கூட காது கொடுத்து கேட்காத கௌசல்யா!

Published by
பால முருகன்

காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை  கௌசல்யா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜயகாந்த்,  விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக சில படங்களில் நடித்தார். முன்னணி நடிகையாக வளம் வர வேண்டிய இவர் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் அமைதியாக கவர்ச்சியாக நடிக்கவே மறுப்பாராம்.

அது மட்டுமின்றி, படப்பிடிப்பு தளங்களில் அதிகமாக யார் கூடவும் பேசாமல் மிகவும் அமைதியாக இருப்பாராம். இதன் காரணமாக ஆரம்ப காலத்தில் பல படங்களில் தொடர்ச்சியா படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் பட வாய்ப்புகளே இல்லாமல் சினிமாவை விட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விலகினார் என்றே கூறலாம்.

இந்த நிலையில், இவர் வளர்ந்து வந்துகொண்டிருந்த காலத்தில் விஜயகாந்த் இவருக்கு அட்வைடஸ் ஒன்றையும் கொடுத்துள்ளாராம். கௌசல்யா விஜயகாந்திற்கு ஜோடியாக தேவன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜயகாந்த் கௌசல்யாவிடம் பேசிகொண்டு இருந்தாராம்.

அப்போது நீ ஒரு நடிகையாக வளர வேண்டும் என்று ஆசைபடுகிறாய் எனவே படக்குழு எப்படியெல்லாம் நடிக்க சொல்கிறாரோ அதே போல நடி சில விஷயங்கள் நடக்கும்போது உன்னுடைய குரல் வெளியே கேட்கவேண்டும் அப்போது தான் ஒரு முன்னணி நடிகையாக நீ வளர முடியும். நீ இப்படியே பேசாமல் இருந்தால் அது நன்றாக இருக்காது நடிகை என்றால் வேறு மாதிரி இருக்கவேண்டும்.

படப்பிடிப்பு தளத்தில் ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய் நன்றாக பேசி கொண்டு ஜாலியாக இரு என அட்வைஸ் செய்தாராம். ஆனால், கௌசல்யா இதெயெல்லாம் காது கொடுத்துக்கூட கேட்கவே இல்லயாம். ஏனென்றால், அவருடைய இயல்பே யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பது தானாம். அந்த சமயம் விஜயகாந்த் சொன்ன கருத்தை கேட்டு இப்போது கௌசல்யா வருத்தமாக இருக்கிறாராம்.

இது குறித்து பேசிய கௌசல்யா ” விஜயகாந்த் அட்வைஸ்  செய்வது மிகவும் நன்றாக இருக்கும் மற்றவர்களை போல இல்லாமல் மனதில் பட்டத்தை வெளிப்படையாகவே பேசுவார். அவருடைய அட்வைஸ் நம்மலுடன் நெருக்கமாக இருப்பவர்கள் கூறுவது போல இருக்கும். ஆனால், அவர் எனக்கு கொடுத்த அட்வைஸை கேட்காமல் போய்விட்டேன்” என் கௌசல்யா தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

18 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

23 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

24 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago