Categories: சினிமா

‘ஜோ’ திரைப்பட கொண்டாட்ட மழையில் VJ ரியோ.! குவியும் பாராட்டுக்கள்…

Published by
கெளதம்

நடிகர் சிவகார்த்திகேயனை போல சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் VJ ரியோ. தற்போது வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடிக்க கமிட் தொடங்கிவிட்டார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை காதலர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு திரையரங்குகளுக்கு சென்று கண்டு கழித்து வருகிறார்கள்.

சமீபத்தில், இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்திகேயன் ரியோ ராஜை நேரில் அழைத்து பாராட்டினார். இதனை தொடர்ந்து பல திரை விமர்சகர்கள் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். இதனால் உற்சாகம் பெற்றிருக்கும் ரியோ, தொடர்ந்து சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளாராம்.

இந்த ஆண்டு வெளியான ஃபில் குட் திரைப்படங்களின் சித்தா, குட் நைட், போர்த்தொழில் ஆகிய படங்களின் பட்டியலில் ஜோ படமும் இடம்பெறும் என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஒரு நல்ல படத்தை ஹரிஹரன் ராம் கொடுத்துள்ளார்.

இந்த திரைப்படத்தினை ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தான் ஹரிஹரன் ராம்-க்கு முதல் திரைப்படம் இந்த படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகிறார்.

படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், படமும் கடந்த 24-ஆம் தேதி வெளியானது.

காதலர்கள் கொண்டாடி தீர்க்க வந்துவிட்டது ‘ஜோ’.! மனதை உருக்கும் திரை விமர்சனம் இதோ…

இதற்கிடையில், படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று நல்ல தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. விரைவில் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தேதியை படக்குழு அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

3 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

4 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

4 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

5 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

5 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

6 hours ago