சினிமா

சக்கரகட்டி திரைப்படத்தை இயக்கியது இந்த தயாரிப்பாளரின் மகனா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

Published by
பால முருகன்

சாந்தனு வேதிகா, இஷிதா சர்மா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “சக்கரக்கட்டி”. இந்த திரைப்படத்தை பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணுவின் மகனான கலாபிரபு தாணு தான் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் அந்த சமயம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்றே கூறலாம். இந்த திரைப்படத்தை இயக்கியவர் எதோ ஒரு இயக்குனர் என்று தான் பலரும் நினைத்து கொண்டு இருந்திருப்பீர்கள். ஆனால், இந்த படத்தை இயக்கிய கலாபிரபு தாணு பல ஹிட் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் மகன் தான்.

அந்த சமயம் கலாபிரபு தாணு இயக்கம் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் “சக்கரக்கட்டி” இயக்கினாராம். இந்த படத்தை அவருடைய தந்தையே தயாரித்தும் இருந்தார். ஆனால், படம் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு விமர்சனத்தை பெறவில்லை என்றே சொல்லலாம். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பெரிய அளவில் ஹிட் ஆனது.

இந்த நிலையில், “சக்கரக்கட்டி” திரைப்படம் பற்றியும் தன்னுடைய மகன் கலாபிரபு தாணு  இயக்கம் மீது கொண்டுள்ள ஆர்வத்தை பற்றியும் கலைப்புலி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னுடைய மகனுக்கு சிறிய வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் அதிகம். அவன் சிறிய வயதில் இருக்கும் போது என்னை பார்க்க வரும் பலரும் அவனிடம் பேசுவார்கள்.

அவனிடம் பேசிவிட்டு என்னிடம் வந்து உன்னுடைய மகன் பெரிய ஆளாக வருவான் அவனுக்குள் நிறைய திறமை இருக்கிறது என்று கூறுவார்கள். ஆனால், சினிமாவை பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்பதால் நம்மளுடைய பையன் இங்கு சிக்கவேண்டாம் என்று நினைத்தேன். எனவே அவர் சினிமாவுக்கு வரக்கூடாது என்று தான் நினைத்தேன்.

ஆனால், காலம் செய்த கோலம் தான் அவனை சினிமாவிற்குள் கொண்டு வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். “சக்கரக்கட்டி” படம் எல்லாம் முடிந்து ரஹ்மானிடம் செல்கிறது. ரீ ரெக்கார்டிங்காக என்னை அழைத்தார். பிறகு என்னிடம் உங்களுடைய மகனை நான் சாதாரணமாக நினைத்துவிட்டேன் ஆனால், திறமையான ஆளு தான் என்று ரஹ்மான் பாராட்டினார் ‘எனவும் கலைப்புலி தாணு கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

5 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

6 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

7 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

7 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

8 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

8 hours ago