Categories: சினிமா

சம்பளத்தை உயர்த்தி கேட்ட அஜித்குமார்! இரண்டு கண்டிஷன் போட்ட சன் பிக்சர்ஸ்?

Published by
பால முருகன்

சென்னை : நடிகர் அஜித்குமார் சம்பளத்தை அதிகமாக கேட்ட நிலையில், சன்பிக்சர்ஸ் நிறுவனம் 2 கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தையும், ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் “குட் பேட் அக்லி” ஆகிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கான வேலைகளும் மிகவும் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இந்த படங்களை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் வீரம், விவேகம், விஸ்வாசம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை  இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சிறுத்தை சிவா அஜித் அந்த படத்தின் மூலம் இணையாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இவர்கள் இருவரும் இணையும் இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த ஆண்டில் இருந்தே தகவல்கள் பரவி வருகிறது. இந்த சூழலில், இந்த திரைப்படத்தில் இருந்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் பின் வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனென்றால், அஜித் முதலில் சம்பளத்தை உயர்த்தி தனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம்.

அஜித் கேட்ட அந்த சம்பளம் ரொம்பவே பெரிய தொகையாக இருந்த காரணத்தால் இவ்வளவு கோடி சம்பளம் கொடுக்க முடியாது என்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் கூறிவிட்டு அவர்கள் ஒரு தொகையை பேசி இத்தனை கோடி தான் கொடுப்போம் என்று முதல் கண்டிஷன் போட்டார்களாம். அதைப்போல மற்றோரு கண்டிஷனும் அஜித்துக்கு சன்பிக்சர்ஸ் நிறுவனம் போட்டதாம்.

படத்தை நடித்து முடித்துக்கொடுத்த பின் 2 மணி நேரம் ப்ரோமோஷனுக்காக நேர்காணலில் பேசி கொடுக்கவேண்டும். இந்த இரண்டு கண்டிஷன்களுக்கு சம்மதம் தெரிவதால் படம் செய்யலாம் என்று அஜித்திற்கு சன்பிக்சர்ஸ் நிறுவனம் கண்டிஷன் போட்டுள்ளதாம். அஜித் சும்மாவே ப்ரோமோஷன் என்றால் ஆர்வம் காட்டமாட்டார் எனவே இந்த கண்டிஷனுக்கு அவர் ஒப்புக்கொள்வது சந்தேகம் என்பதால் சன்பிக்சர்ஸ் நிறுவனம் படத்தில் இருந்து விலக வாய்ப்பு இருக்கிறதாம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!

சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ''படத்தில் தனக்கு…

1 minute ago

”என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி இருந்தது” – ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு.!

விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில்…

33 minutes ago

Fact Check: பாடகி ஆஷா போஸ்லே மரணம்.? மகன் கூறிய உண்மை தகவல்.!

டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி…

1 hour ago

இந்த இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

INDvsENG : மூன்றாவது போட்டியை பார்க்க விராட் கோலி ஏன் வரவில்லை? தினேஷ் கார்த்தி உடைத்த உண்மை!

லண்டன் : உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்  விராட்…

2 hours ago

’75 வயதானால் வழி விடுங்கள்” …யாரை சொல்கிறார் மோகன் பகவத்?

மகாராஷ்டிரா : மாநிலம் நாக்பூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) தலைவர் மோகன் பகவத்,…

2 hours ago