சினிமா

கார் எல்லாம் வேண்டாம் பா..அது மட்டும் போதும்! நெகிழ வைத்த விஜய்!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில்  சமீபகாலமாக திரைப்படங்கள் வெற்றி அடைந்து விட்டால் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் ஹீரோ மற்றும் இயக்குனருக்கு கார்களை கிப்ட் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் என்ற முறையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு காரை பரிசாக கொடுத்திருந்தார்.

அதைப்போல ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு கார்கள் மற்றும் காசோலையை பரிசாக வழங்கி இருந்தார்கள்.

லியோ படத்தை பார்த்துவிட்டு கால் செய்த ரஜினிகாந்த்! அதுவும் யாருக்கு தெரியுமா?

ஆனால், இவர்களுக்கு முன்பே மாஸ்டர் மற்றும் லியோ படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார் மாஸ்டர் படத்தின் வெற்றியின் போதே விஜய்க்கு காரை பரிசாக வழங்க முடிவு செய்து இருந்தாராம். ஏனென்றால், மாஸ்டர் திரைப்படம் வெளியான சமயத்தில் தான் கொரோனா பரவல் எல்லாம் நீங்கி திரையரங்கு மீண்டும் திறக்கப்பட்டது. அந்த சமயத்தில் மாஸ்டர் படம் அனைவர்க்கும் லாபத்தை கொடுத்தது.

#LeoIndustryHit : பாக்ஸ் ஆபிஸில் தெறிக்கவிடும் ‘லியோ’! 2 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

எனவே, இதன் காரணமாக தான் விஜய்க்கு அந்த சமயமே கார் வாங்கி கொடுக்க முடிவு செய்து உங்களுக்கு நான் கார் வாங்கி தரவா சார் என்ன கார் சார் வேணும் உங்களுக்கு என்று கேட்டாராம் . அதற்கு விஜய் கார் எல்லாம் எனக்கு வேண்டாம் பா எனக்கு எதுக்கு பா கார் நீ எனக்கு படத்தில் நடிக்க சம்பளம் கொடுத்துவிட்டாய் இதற்கு மேல் என்ன வேணும் வேறு எதுவும் வேண்டாம் என கூறிவிட்டாராம்.

விஜய் கார் வேண்டாம் என்று கூறியவுடன் லலித் குமார் அவரை பார்த்து ஆச்சரியாமாகிவிட்டாராம். இந்த தகவலை லலித் குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். கார் வாங்கி கொடுக்கிறேன் என்று தயாரிப்பாளர் சொல்லியும் கார் வேண்டாம் என விஜய் கூறியுள்ளது அவருடைய ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் விஜய்யை பாராட்டி வருகிறார்கள்.  மேலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக்கியுள்ள லியோ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

28 minutes ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

59 minutes ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

3 hours ago

ஐயோ அவரா? “அவரு ரொம்ப டேஞ்சர்”…ரிஷப் பண்டை புகழ்ந்த பென் ஸ்டோக்ஸ்!

லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…

5 hours ago