கிரிவலம் செல்லும் போது செய்ய வேண்டியதும் ..செய்ய கூடாததும்..!

Published by
K Palaniammal

கிரிவலம் -கிரிவலம் ஏன் செல்ல வேண்டும் என்றும் அதற்கான பலன்களைப் பற்றியும் இப்பதிவில் காணலாம்.

கிரிவலம் என்றால் மலையை வலம் வருதலாகும். அதாவது மலையை சுற்றி வழிபாடு செய்வதாகும். கருவறைக்குள் இருக்கும் தெய்வீக அலைகள் நாம் மலையை சுற்றும் போதும் அதன் ஆற்றல் நமக்கு கிடைக்கும்.

பொதுவாக கிரிவலங்களில் திருவண்ணாமலை சிறப்பு பெற்றதாகும். பெரும்பாலனோர் செல்வதும் அங்குதான். ஆனால் அங்கு மட்டுமல்லாமல் மலை எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் கூட கிரிவலம் செல்லலாம்.

கிரிவலம் செல்லும்போது செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்:

கிரிவலம் செல்லும் போது மெதுவாகத்தான் நடக்க வேண்டும். விளையாடி கொண்டு ஓடுவது பேசிக்கொண்டு செல்வது இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும். இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே செல்வதுதான் சிறந்தது.

நீண்ட தூரம் கிரிவலம் செல்ல வேண்டி இருந்தால் குறைவான உணவுகளை அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம்.

கிரிவலம் செய்வதால் உண்டாகும் பலன்கள்:

மலைகளை சுற்றி பல சித்தர்கள் வாழ்வார்கள். நாம் கிரிவலம் செய்யும்போது கடவுளின் அருளோடு சித்தர்களின் ஆசியும்  ஆற்றலும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் அம்மாவாசை பௌர்ணமி தினங்களில் கிரிவலம் மேற்கொள்வது மிகச் சிறப்பாகும்.அருள் வேண்டுவோருக்கு அம்மாவாசையிலும் பொருள் வேண்டுவோருக்கு  பௌர்ணமியிலும் கிரிவலம் செய்யலாம் என்ற வாக்கு கூட உள்ளது.

ஏனென்றால் அந்த தினங்களில் மூலிகைகள் தங்களின் முழு பலனையும் வெளிப்படுத்தும், அதன் அபூர்வ சக்தியும் நமக்கு கிடைக்கும். குறிப்பாக பௌர்ணமி தினத்தில் சில அபூர்வ மூலிகைகள் அதன் ஆற்றலை வெளிப்படுத்தும்.

நம்முடைய வினைகள் மனம், மெய் ,மொழி இவைகளின் மூலம் தான் வரும். இந்த வகையில் இறைவனை நினைத்து நம் உடலை வருத்தி செய்யும் செயலானது நம் வினைகளை நீக்கும், தெய்வ அனுகூலம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

கிழமைகளும் கிரிவலதின் பலன்களும் :

ஒவ்வொரு நாளும் கிரிவலம் செல்லும்  போது ஒவ்வொரு பலன்கள் நமக்கு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

  • ஞாயிறு கிரிவலம் நோய் நீங்கும், சிவனின் அருள் கிடைக்கும்.
  • திங்கள் கிரிவலம் பாவம் குறைந்து புண்ணியம் பெருகும்.
  • செவ்வாய் கிரிவலம் வறுமை நீங்கும், கடன் நீங்கும் ,சகல சம்பத்தும் கிடைக்கும்.
  • புதன்கிரிவலம் கலைகளில் வளர்ச்சி கிடைக்கும்.
  • வியாழன் கிரிவலம் குருவின் அருள் கிடைக்கும், ஞானம் பெருகும்.
  • வெள்ளி கிரிவலம் செல்வம் பெருகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • சனி கிரிவலம் பிணியை போக்கும் ,வியாபாரத்தில் விருத்தி கிடைக்கும், தோஷங்கள் அகழும்.

இப்படி ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. அதிலும் பிரம்ம முகூர்த்தத்தில் கிரிவலம் மேற்கொள்வது மிகச் சிறப்பாகும். இவ்வளவு சிறப்பு பெற்ற கிரிவலத்தை வாழ்வில் நாம் ஒரு முறையேனும் வலம் வந்து அந்த மலையைப் போல் நாம் வாழ்விலும் உயர்வோம்.

Recent Posts

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

28 minutes ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

1 hour ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

1 hour ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

3 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

3 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

4 hours ago