கிரிவலம் செல்லும் போது செய்ய வேண்டியதும் ..செய்ய கூடாததும்..!

Published by
K Palaniammal

கிரிவலம் -கிரிவலம் ஏன் செல்ல வேண்டும் என்றும் அதற்கான பலன்களைப் பற்றியும் இப்பதிவில் காணலாம்.

கிரிவலம் என்றால் மலையை வலம் வருதலாகும். அதாவது மலையை சுற்றி வழிபாடு செய்வதாகும். கருவறைக்குள் இருக்கும் தெய்வீக அலைகள் நாம் மலையை சுற்றும் போதும் அதன் ஆற்றல் நமக்கு கிடைக்கும்.

பொதுவாக கிரிவலங்களில் திருவண்ணாமலை சிறப்பு பெற்றதாகும். பெரும்பாலனோர் செல்வதும் அங்குதான். ஆனால் அங்கு மட்டுமல்லாமல் மலை எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் கூட கிரிவலம் செல்லலாம்.

கிரிவலம் செல்லும்போது செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்:

கிரிவலம் செல்லும் போது மெதுவாகத்தான் நடக்க வேண்டும். விளையாடி கொண்டு ஓடுவது பேசிக்கொண்டு செல்வது இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும். இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே செல்வதுதான் சிறந்தது.

நீண்ட தூரம் கிரிவலம் செல்ல வேண்டி இருந்தால் குறைவான உணவுகளை அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம்.

கிரிவலம் செய்வதால் உண்டாகும் பலன்கள்:

மலைகளை சுற்றி பல சித்தர்கள் வாழ்வார்கள். நாம் கிரிவலம் செய்யும்போது கடவுளின் அருளோடு சித்தர்களின் ஆசியும்  ஆற்றலும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் அம்மாவாசை பௌர்ணமி தினங்களில் கிரிவலம் மேற்கொள்வது மிகச் சிறப்பாகும்.அருள் வேண்டுவோருக்கு அம்மாவாசையிலும் பொருள் வேண்டுவோருக்கு  பௌர்ணமியிலும் கிரிவலம் செய்யலாம் என்ற வாக்கு கூட உள்ளது.

ஏனென்றால் அந்த தினங்களில் மூலிகைகள் தங்களின் முழு பலனையும் வெளிப்படுத்தும், அதன் அபூர்வ சக்தியும் நமக்கு கிடைக்கும். குறிப்பாக பௌர்ணமி தினத்தில் சில அபூர்வ மூலிகைகள் அதன் ஆற்றலை வெளிப்படுத்தும்.

நம்முடைய வினைகள் மனம், மெய் ,மொழி இவைகளின் மூலம் தான் வரும். இந்த வகையில் இறைவனை நினைத்து நம் உடலை வருத்தி செய்யும் செயலானது நம் வினைகளை நீக்கும், தெய்வ அனுகூலம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

கிழமைகளும் கிரிவலதின் பலன்களும் :

ஒவ்வொரு நாளும் கிரிவலம் செல்லும்  போது ஒவ்வொரு பலன்கள் நமக்கு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

  • ஞாயிறு கிரிவலம் நோய் நீங்கும், சிவனின் அருள் கிடைக்கும்.
  • திங்கள் கிரிவலம் பாவம் குறைந்து புண்ணியம் பெருகும்.
  • செவ்வாய் கிரிவலம் வறுமை நீங்கும், கடன் நீங்கும் ,சகல சம்பத்தும் கிடைக்கும்.
  • புதன்கிரிவலம் கலைகளில் வளர்ச்சி கிடைக்கும்.
  • வியாழன் கிரிவலம் குருவின் அருள் கிடைக்கும், ஞானம் பெருகும்.
  • வெள்ளி கிரிவலம் செல்வம் பெருகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • சனி கிரிவலம் பிணியை போக்கும் ,வியாபாரத்தில் விருத்தி கிடைக்கும், தோஷங்கள் அகழும்.

இப்படி ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. அதிலும் பிரம்ம முகூர்த்தத்தில் கிரிவலம் மேற்கொள்வது மிகச் சிறப்பாகும். இவ்வளவு சிறப்பு பெற்ற கிரிவலத்தை வாழ்வில் நாம் ஒரு முறையேனும் வலம் வந்து அந்த மலையைப் போல் நாம் வாழ்விலும் உயர்வோம்.

Recent Posts

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

12 minutes ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

23 minutes ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

37 minutes ago

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…

2 hours ago

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை.., கூடுதல் தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு.!

சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…

2 hours ago

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

19 hours ago