உங்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் விஷ்ணுபதி புண்ணிய காலம்.. எப்போது தெரியுமா?

Published by
K Palaniammal

விஷ்ணுபதி புண்ணிய காலம்– விஷ்ணுபதி புண்ணிய காலத்தின் சிறப்புகளும் இந்த ஆண்டு வரும் தேதி பற்றி இப்பதிவில் காணலாம்.

விஷ்ணுபதி புண்ணிய காலம் என்றால் என்ன?

ஏகாதசி விஷ்ணுவிற்கு எவ்வளவு சிறப்பு பெற்றதோ அதேபோல் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலமும் சிறப்பு பெற்ற புனிதமான நாளாகும். இந்த புண்ணிய காலம் ஒருசில  தமிழ் மாதப் பிறப்பின் முதல் நாளே வரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் புண்ணிய காலமாகும் .

இப்படி வருடத்திற்கு நான்கு முறை வருகிறது. மாசி முதல் தேதி, வைகாசி முதல் தேதி ,ஆவணி முதல் தேதி ,கார்த்திகை முதல் தேதி இந்த நாட்களில் தான் விஷ்ணுபதி புண்ணிய காலம் வரும்.

இந்த நேரத்தில் செய்யும் அபிஷேகம், ஆராதனை, பூஜைகளுக்கு பல மடங்கு சக்தி உண்டு. இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தை மேற்கொள்வது பல ஏகாதசி விரதங்களை செய்ததற்கான சமம் என சாஸ்திரங்கள் கூறுகிறது.

இந்த புண்ணிய காலத்தை பற்றி பலருக்கும் தெரியாத ஒரு ரகசியமாகவே இருந்து வருகிறது. இதைத் தெரிந்தவர்கள் இன்றும் இந்த நேரத்தை பயன்படுத்தி பயன் பெற்று வருகிறார்கள்.

இந்த ஆண்டிற்கான இரண்டாவது புண்ணிய காலம் எப்போது?

வருகின்ற மே மாதம் 14ஆம் தேதி 2024 செவ்வாய்க்கிழமை வைகாசி ஒன்று அன்றைக்கு வருகிறது. அதிகாலை  1:30 மணிக்கு துவங்கி காலை 10:30 க்கு முடிவடைகிறது இந்தக் குறிப்பிட்ட நேரத்தை தவற விடாதீர்கள்.

வழிபாட்டு முறைகள்:

இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்குள்ள கொடி மரத்தை 27 முறை வலம் வர வேண்டும் .ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் 27 பூக்களை வைக்க வேண்டும். கொடி மரத்தை சுற்றி வரும்போது கருவறை பிரகாரத்துடன் சேர்த்துதான் சுற்ற வேண்டும்.

காலை 10:30-க்குள் கோவிலுக்கு சென்று வரவேண்டும். மேலும் வீட்டிற்கு வரும்போது மஞ்சள் மற்றும் கல் உப்பை வாங்கி வந்து பூஜையறையில் வைத்து பூஜை செய்து பிறகு அதை பயன்படுத்த வேண்டும்.

பலன்கள்:

வருடத்தில் வரும் நான்கு விஷ்ணுபதி புண்ணிய காலத்தையும் தொடர்ந்து செய்து வரும்போது பொருளாதாரத்தில் உயர்வு ஏற்படும். தரித்திரம் நீங்கும், வறுமை ஒழியும். செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும்.

ஆகவே இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் மகாவிஷ்ணுவின் அருளும் கருணையும் மிக அதிகமாகவும் பூரணமாகவும் இருக்க கூடிய அற்புத நாளை தவற விடாதீர்கள்.

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

5 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

5 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

6 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

7 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

7 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

7 hours ago