குருவின் பரிபூரண அருள் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது..!

Published by
K Palaniammal

குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக வழிபாடு என்பது சிறப்பாக கருதப்படுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்ற வாக்கு உள்ளது. அந்த அளவுக்கு குரு பகவானுக்கு ஆற்றல் உள்ளது.

சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கரிச முனிவரின் மகனாக அவதரித்தவர் தான் குரு பகவான். இவர் கல்வி, கலைகள் என அனைத்தும் கற்றறிந்தவர் என்பதால் தான் தேவர்களுக்கு குருவாகவும் விளங்குகிறார். அதனால்தான் இவருக்கு தேவகுரு என்றும் பெயர் உண்டு. இவரை வியாழ பகவான் என்றும் கூறுவார்கள்.

குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக கூடியவர்.இவருடைய வாகனம் யானையாகும் . இவரின் தசைக்காலம் 16 ஆண்டுகள் ஆகும். இவருக்குப் பிடித்த நிறம் பொன்னிறம் மற்றும் மஞ்சள் நிறமாகும். குரு பகவானை வழிபடும்போது மஞ்சள் மற்றும் பொன்னிற வஸ்திரத்தை சாட்டி கொண்டைக்கடலை மாலை அல்லது நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்வது சிறப்பாகும்.

மேலும் இவர் தனுசு மற்றும் மீன ராசிகளை சொந்த வீடாக கொண்டவர். இவரை வழிபட வியாழக்கிழமை உகந்த நாள் ஆகும். குருவிற்கு பிடித்த சில விஷயங்களை நாம்  செய்யும் போது அவரின் பரிபூரண அனுக்கிரகத்தை பெற முடியும். அது என்னவென்று பார்ப்போம்.

ஏழை எளியோருக்கு உதவுவது ,அவர்களை மதிப்பது, கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசான்களை மதிப்பது ,நம் வாழ்வில் வழிகாட்டிகளாக இருக்கும் குருமார்களையும் சித்தர்களையும் மதிப்பது, கல்வி கற்க இயலாதவர்களுக்கு கல்வி கற்க உதவி செய்வது ,  பசுவிற்கு உதவுவது. குறிப்பாக மற்றவர்களை மதிக்க வேண்டும் ,இது போன்ற செயல்களை செய்யும் பொழுது அவரின் அருள் கிடைக்கும்.

குருவின் பரிபூரண அருள் நமக்கு கிடைத்து விட்டால் நாமும் அவரைப் போல் ஞானத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்குவோம்.

Recent Posts

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

34 minutes ago

திருமணம் முடிந்த 10 நாட்களில் கார் விபத்தில் பறிபோன கால் பந்து வீரர் உயிர்.!

சென்னை :  லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…

46 minutes ago

‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…

3 hours ago

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…

3 hours ago

ராமராக ரன்பீர்.., ராவணனாக யாஷ்.!! மிரள வைக்கும் ‘ராமாயணம்’ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.!

சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…

3 hours ago

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…

3 hours ago