வானிலை

உ.பி.யில் மீண்டும் இடி மின்னலுடன் மழை – ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு..!

உத்தர பிரதேசத்தில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெருமளவில் பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்த தொடர் மழை ஓய்ந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில், உ.பி.யின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கோண்டா, பைசாபாத், சீதாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றும் வீசியதால், […]

உ.பி.யில் மீண்டும் இடி மின்னலுடன் மழை - ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு 3 Min Read
Default Image

5 மாவட்டங்களில் கனமழை தொடரும்- மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

தென் மேற்கு பருவமழை கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் பெய்து வருகிறது. பருவமழை தீவிரம் அடைந்து கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த 5 மாவட்டங்களில் கனமழை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மற்ற இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக லேசாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் […]

5 மாவட்டங்களில் கனமழை தொடரும்- மீனவர்களுக்கு எச்சரிக்கை 3 Min Read
Default Image

5வது நாளாக தொடர்ந்து வெள்ளப் பெருக்கு.! இடைவிடாது கொட்டி தீர்த்த மழை..!

நீலகிரி மாவட்டத்தில் பெய்த இடைவிடாத மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பில்லூர் அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 100 அடி ஆகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 97 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேரம் செல்லச் செல்ல […]

பவானி ஆறு 6 Min Read
Default Image

மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கி 10 பேர் பலி..!

மேற்கு வாங்காளம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் பாங்குரா மாவட்டத்தில் கனமழை காரணமாக மின்னல் தாக்கியதில் 4 பேரும், ஹூக்லி மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். மேற்கு மித்னாபூர், பிர்பூம் மற்றும் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் மின்னலுக்கு` பலியாகியுள்ளனர். மேலும், பலர் மின்னல் தக்கியதில் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்னல் 2 Min Read
Default Image

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்..!

தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மராட்டியம், கோவா மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கு தொடர்ச்சி […]

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்..! 3 Min Read
Default Image

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை – பவானிசாகர் அணை ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது..!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நீண்ட நாளுக்குப் பிறகு பவானிசாகர் அணைக்கு காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. மேலும் நீலகிரி மலை பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும், பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 6436 கன அடி வீதம் தண்ணீர் […]

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை - பவானிசாகர் அணை ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது 3 Min Read
Default Image

கேரளாவில் 15-ந்தேதி வரை கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியதால் கடந்த 2 வாரங்களாக மாநிலம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. ஒரே நாளில் 7 முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்யும் என்றும் சில இடங்களில் 10 முதல் 12 சென்டிமீட்டர் வரை மிக […]

கேரளா 6 Min Read
Default Image

மின்னல் வருமுன்னே காட்டிகொடுக்கும் சென்சார்.!ஒடிசா அறிவிப்பு..!

ஒடிசா மாநிலத்தில் இடி மின்னல் தாக்கி பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருடத்துக்கு 419 பேர் இடி மின்னல் தாக்கத்தால் பரிதாபமாக உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சிறப்பு நிவாரண ஆணையர் சேதி, மின்னல் தாக்கி கடந்த 3 நாட்களில் மட்டும் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற உயிரிழப்புகளை தடுப்பதற்காக மின்னலை முன்கூட்டியே அறியும் சென்சாரை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்திடம் ஒடிசா அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் […]

3 Min Read
Default Image

தீவிரமடையும் பருவமழை! குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை நீடிப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் கோவை குற்றாலம் அருவி உள்ளது. கோவை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த அருவி அமைந்துள்ள வனப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் கடந்த 3 நாட்களாக அருவியில் வெள்ளம்பெருக் கெடுத்து பாய்கிறது. இதனால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத் துறை தடை விதித்தது. நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அருவிக்கு செல்லும் பாதையில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தன. இன்றும் அங்கு […]

குரங்கு 3 Min Read
Default Image

வங்க கடலில் புயல் சின்னம்.!புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

வங்க கடல் பகுதியில் திடீர் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. இதனை எச்சரிக்கையாக அறிவிக்கும் பொருட்டு புதுவை துறைமுகத்தில் தூர புயல் முன்னறிவிப்பு கொடி எண். 1 ஏற்றப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், புதுவையில் நேரடியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும், கடலோர பகுதிகளில் காற்று சற்று அதிகமாக வீசக்கூடும். கடல் சற்று சீற்றமாக காணப்படும். புதுவையில் மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ந் […]

வங்க கடலில் புயல் சின்னம்.!புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு 2 Min Read
Default Image

மழை எதிரொலி: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்வு..!

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை களக்காடு மலைப்பகுதியில் உள்ள கொடுமுடியாறு அணைபகுதியில் நேற்று அதிகபட்சமாக 17 சென்டி மீட்டர் மழை பெய்தது. அப்பகுதியில் இன்று காலை வரை 10 செ.மீ. மழை பெய்துள்ளது. பாபநாசம் அணைப்பகுதியில் இன்று காலை வரை 12 சென்டி மீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 5 செ.மீ. மழையும், கருப்பாநதி யில் 8 செ.மீ. மழையும், குண்டாறில் 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது. மழை காரணமாக அனைத்து அணைகளுக்கும் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் […]

கனமழை 7 Min Read
Default Image

தனுஷ்கோடியில் புயல் எச்சரிக்கை ! 70 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று.! சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையொட்டி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் தெற்கு அரபிக் கடல், வங்க கடலில் அதிக காற்று வீசி வருவதால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காணப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் காற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தொண்டி, பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக தனுஷ்கோடி […]

thanushkodi 3 Min Read
Default Image

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

வங்கதேசம் அருகே கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடல் பகுதியில் காற்று பலமாக வீசுவதோடு கடல் சீற்றமாக காணப்படும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..! 1 Min Read
Default Image

நாகையில் 1-ம் எண் புயல் ஏற்றம் ! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் வீசும் சூறை காற்றில் தஞ்சை நகரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. திருவையாறு பகுதிகளில் வாழை மரங்கள் முறிந்து சேதமாகி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக தஞ்சை, நாகை, திருவாரூரில் ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்தது. நேற்று வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. அதேநேரத்தில் அனைத்து இடங்களிலும் பலத்த சூறை காற்று […]

நாகையில் 1-ம் எண் புயல் ஏற்றம் ! மீனவர்களுக்கு எச்சரிக்கை..! 4 Min Read
Default Image

Breaking News: உத்தரபிரதேசத்தில் புழுதிப்புயல்,கனமழை ! 26 பேர் உயிரிழப்பு..!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு புழுதிப் புயல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சில மாவட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. மழை, வெள்ளம் மற்றும் மின்னல் தாக்குதல் சார்ந்த விபத்துகளில் கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஜாவ்ன்பூர் மற்றும் சுல்தான்பூர் மாவட்டங்களில் தலா 5 பேரும், உன்னாவ் மாவட்டத்தில் 4 பேரும், சன்டவுலி மற்றும் […]

Breaking News: உத்தரபிரதேசத்தில் புழுதிப்புயல் 3 Min Read
Default Image

இடி, மின்னலுடன் கனமழை! டெல்லியில் இயல்பு வாழ்க்கை ,விமான சேவைகள் முடக்கம்..!

டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் கடந்த 15 நாட்களாக வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது. மேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர […]

flightsdiverted 3 Min Read
Default Image

தென்மேற்கு பருவ மழை: அடுத்த 2- நாட்களில் தென் தமிழகப் பகுதிகளில் தொடங்க வாய்ப்பு..!! வானிலை ஆய்வு மையம்..!!

அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை அடுத்த இரண்டு நாட்களில் தென் தமிழகப் பகுதிகளில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையின் ஒரு சில இடங்களில் இடியுடன் மழைக்கும்,  ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் […]

தென்மேற்கு பருவ மழை அடுத்த 2- நாட்களில் தென் தமிழகப் பகுதிகளில் தொடங்க வாய 2 Min Read
Default Image

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு : தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!

சென்னை வானிலை ஆய்வு மையம், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தெரிவித்துள்ளது. மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் கடற்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக 36 […]

#Chennai 3 Min Read
Default Image

மார்ச் 23ம் தேதி-உலக வானிலை தினம்…!!

வானிலையை சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக வானிலை தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. “வாழ்க்கையையும் பொருட்களையும் பாதுகாக்க வானிலையை கண்காணிப்போம்’ என்பது இந்தாண்டு இதன் மையக்கருத்தாக உள்ளது. தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டுமின்றி,மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறைக்கு, சவாலாக திகழ்கிறது… தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஓசோன் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது இதில் வளரும் […]

#Weather 4 Min Read
Default Image

கோவில்பட்டியில் பலத்த இடி, மின்னலுடன் மழை…!!

  கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. இன்று காலையில் பலத்த வெயில் அடித்தாலும், மதியத்திற்கு மேலாக வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து பலத்த இடி,மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.தொடர்ந்து சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததது. இந்த மழையினால் கோவில்பட்டி புதுரோடு, மார்க்கெட் சாலைகளில் மழைநீர் வெள்ளபோன்று போனதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

#Thoothukudi 2 Min Read
Default Image