RITES [Image Source : Studycafe]
இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனம் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஒரு மினி ரத்னா மத்திய பொதுத் துறை நிறுவனமானது இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ், ஏப்ரல் 26, 1974 இல் இணைக்கப்பட்டது. இது ஒரு பல்துறை பொறியியல் மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். இது கருத்து முதல் ஆணையிடுதல் வரை அனைத்து அம்சங்களிலும் விரிவான சேவைகளை வழங்குகிறது.
இந்த RITES நிறுவனம், கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பதவியின் விவரம்:
RITES நிறுவனம், பட்டதாரி பொறியாளர் பயிற்சி (சிவில் இன்ஜினியரிங்) பணியில் காலியாக உள்ள 20 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்தவிட்டு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
பட்டதாரி பொறியாளர் பயிற்சி (சிவில் இன்ஜினியரிங்) பணிக்கு விண்ணப்பிப்பவர் 21 முதல் 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தகுதி:
விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சிவில் இன்ஜினியரிங்கில் முழுநேர இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பக்கட்டணம்:
பொது/ஓபிசி விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். EWS/எஸ்சி/எஸ்டி/ PWD வேட்பாளர்கள் விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும்.
தேர்வு முறை மற்றும் சம்பள விவரம்:
பட்டதாரி பொறியாளர் பயிற்சி பணிக்கான தேர்வு GATE மதிப்பெண் 2023 மற்றும் நேர்காணல் முறைப்படி நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 2 மாதங்களுக்கு பயிற்சியில் ஈடுபடுவார்கள். பயிற்சிக் காலம் முடிந்ததும், விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
கடைசி தேதி:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி ஜூன் 30 ஆகும். அதனை தாண்டி அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…