வேலைவாய்ப்பு

மாதம் ரூ.15,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..! 12th முடித்திருந்தால் போதும்..உடனே விண்ணப்பிங்க..!

Published by
செந்தில்குமார்

AAICLAS நிறுவனம் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலிட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் (AAICLAS), அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தேவை மற்றும் செயல்திறன் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு நிலையான கால ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணிகண்டங்களை நிரப்ப ஆற்றல் மிக்க விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பதவி:

AAICLAS நிறுவனம், பாதுகாப்பு ஸ்கிரீனர் பணியில் காலியாக உள்ள 60 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.

வயது:

பாதுகாப்பு ஸ்கிரீனர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அறிவிப்பை அணுகவும்.

தகுதி:

  • பாதுகாப்பு ஸ்கிரீனர் பணிக்கு விண்ணப்பிப்பவர் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து 12வது அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • செல்லுபடியாகும் BCAS ஸ்க்ரீனர் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கிலம், ஹிந்தி மற்றும்/அல்லது உள்ளூர் மொழியைப் படிக்கும்/பேசும் திறன்.

விண்ணப்பிக்கும் முறை:

  • பாதுகாப்பு ஸ்கிரீனர் பணிக்கு விண்ணப்பிப்பவர் முதலில் AAICLAS -யின் www.aaiclas.aero அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் இருக்கும் Notification அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு, அறிவிப்பில் இருக்கும் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும்.
  • விண்ணப்பதாரர் இணைக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து hr_amritsar@aai.aero என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது விமான நிலைய இயக்குனர், இந்திய விமான நிலைய ஆணையம், SGRDJI விமான நிலையம், அமிர்தசரஸ்-143101 என்ற முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.
  • தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்ட தேதி, நேரம் மற்றும் இடத்தில் நேர்காணலுக்கு வர வேண்டும். மேலும், அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும்.

சம்பள விவரம்: 

பாதுகாப்பு ஸ்கிரீனர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும்.

கடைசி தேதி:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஜூன் 30ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட தேதிக்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்கள் எந்த வகையிலும் பரிசீலிக்கப்படாது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

5 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

8 hours ago