FakeEmploymentLetter [Image source : Vulcan Post]
வேலைவாய்ப்பு தருவதாக கூறி, பணம் கேட்கும் போலி கடிதத்தை அரசு பகிர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் படித்து விட்டு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் சிலர் கிடைத்த வேலையை செய்து வாழ்க்கையை நடத்துகின்றனர். மேலும், சிலர் தான் படித்த படிப்பிற்கான வேலை கிடைக்கும் வரை வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்து வைத்து காத்திருக்கின்றனர்.
அந்தவகையில், இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட முதன்மையான திட்டம் தான் டிஜிட்டல் இந்தியா. இது இந்தியாவை டிஜிட்டல் முறையில் அதிகாரம் பெற்ற சமூகமாகவும் அறிவுப் பொருளாதாரமாகவும் மாற்றும் நோக்குடன் உள்ளது. இந்த திட்டம் ஜூலை 1, 2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.
இதன்மூலம், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்பொழுது, மோசடியில் ஈடுபடுபவர்கள் டிஜிட்டல் இந்தியாவின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, வேலை கொடுப்பதாகக் கூறி பணம் கேட்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டிஜிட்டல் இந்தியா தனது ட்விட்டரில் ஒரு போலி வேலைக் கடிதத்தின் படத்தைப் பகிர்ந்துள்ளது. அதில், ‘மோசடி செய்பவர்கள் டிஜிட்டல் இந்தியாவின் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார்கள், தங்களது அதிகாரப்பூர்வ லோகோவைப் பயன்படுத்தி, வேலை கொடுப்பதாகக் கூறி பணம் கேட்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற போலியான கடிதங்களை நம்பாதீர்கள், எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள், என்றும் எப்போதும் ஒரு வேலைக்கான உண்மையான தகவல்களை சரிபார்த்து அதன் பிறகு அதில் பதிவு செய்யுமாறு கூறியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…