10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்…! 12,828 பேருக்கு அஞ்சல் துறையில் வேலை..!

Published by
செந்தில்குமார்

இந்திய அஞ்சல் துறை (DoP), இந்தியா முழுவதும் காலியாக உள்ள ஜிடிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கும் மேலாக, அஞ்சல் துறை (DoP) நாட்டின் தகவல்தொடர்புக்கு முதுகெலும்பாக உள்ளது மற்றும் நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இது பல வழிகளில் இந்திய குடிமக்களின் வாழ்க்கையில் தொடர்புடையதாக உள்ளது.

இதன்மூலம் அஞ்சல்களை வழங்குதல், ஒவ்வொரு கிராமத்திற்கும் அரசாங்கத்தின் சிறு சேமிப்புத் திட்டங்களின் கீழ் வைப்புத்தொகைகளை வழங்குதல், அஞ்சல் ஆயுள் காப்பீடு (பிஎல்ஐ) மற்றும் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு (ஆர்பிஎல்ஐ) ஆகியவற்றின் கீழ் ஆயுள் காப்பீடு வழங்குதல் போன்ற சேவைகளை செய்து வருகிறது.

அஞ்சல் துறையானது, 1,55,000 க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களுடன் உலகில் மிகவும் பரவலாக விநியோகிக்கப்படும் அஞ்சல் வலையமைப்பைக் கொண்டுள்ளது. தற்பொழுது, இந்திய அஞ்சல் துறை, இந்தியா முழுவதும் காலியாக உள்ள 12,828 கிராமின் டாக் சேவக் ஜிடிஎஸ் (ஜிடிஎஸ்) பணிக்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப்படிவத்தை  வெளியிட்டுள்ளது.

இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை படித்துவிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

தகுதி & வயது வரம்பு:

அஞ்சல் துறையில் சேர விரும்பும் விண்ணப்பதாரர் கணிதம் அல்லது ஆங்கிலத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் மற்றும் உள்ளூர் மொழியில் திறன் உள்ளவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf -ஐப் பார்த்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது மற்றும் ஒபிசி(OBC) பிரிவினருக்கு ரூ.100 கட்டணமும், பெண்கள், எஸ்.சி/எஸ்.டி, பிரிவினருக்கு கட்டணம் இல்லை. இந்த கட்டணத்தை ஆன்லைன் / ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் அறிவிப்பை படித்து தெரிந்து கொண்டு அதன்பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. தகுதியும், ஆர்வமும் உடைய விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாநில வாரியான காலியிட விவரங்கள்:

கிராமின் டாக் சேவக் ஜிடிஎஸ் (ஜிடிஎஸ்) பணிக்கு ஆந்திரா, அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Vacancy Details [Image Source : indiapostgdsonline]

More Info : https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Final_Post_Consolidation.pdf 

கடைசி தேதி:

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் இன்று முதல் தொடங்கி (22-05-2023) விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 11ம் தேதி வரை உள்ளது. மேலும், விண்ணப்பத்திற்கான கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி ஜூன் 11ம் தேதி வரை உள்ளது.

Imp Details [Image Source : indiapostgdsonline]
Published by
செந்தில்குமார்

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

2 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

19 hours ago