biriyani 1
Chicken Biriyani -குக்கரில் பிரியாணி குழையாமல் இருக்கவும் ,பிரியாணி சுவையாக இருக்கவும் எப்படி செய்யலாம் என இப்பதிவில் காணலாம்.
முதலில் அரிசியை கழுவி விட்டு ஊற வைக்கவும் ,அப்போதுதான் அரிசி உடையாமல் இருக்கும். குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை சேர்த்து காய்ந்ததும் சோம்பு ,பட்டை ,கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்க்கவும். அதனுடன் வெங்காயம் ,பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை அரைத்து சேர்த்து வதக்கவும்.
பிரியாணி சுவையாக இருக்க தக்காளியை அரைத்து சேர்த்துக் கொள்ளவும். தக்காளி வதங்கியவுடன் புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும், வதங்கியதும் பிரியாணி மசாலா, சிக்கன் மசாலா ,மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி தயிரை சேர்த்து கலந்து விட்டு சிக்கனை சேர்த்து மசாலா படும் வரை கிளறிவிட்டு 4 கப் தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து சரி பார்த்துக் கொள்ளவும் .
இப்போது அரிசியை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் குக்கர் மூடி போட்டு இரண்டு விசில் விட்டு மூன்றாவது விசில் வருவதற்கு முன்பே அடுப்பை அணைத்து விடவும். பிறகு விசில் அடங்கியதும் திறந்து பார்த்தால் சுவையாக கமகமவென பிரியாணி தயாராகி இருக்கும்.
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…