லைஃப்ஸ்டைல்

இந்த இலையில் இப்படி ஒரு ஆற்றல் உள்ளதா…? வாங்க பார்க்கலாம்..!

Published by
லீனா

கரிசலாங்கண்ணி இலையில் உள்ள மருத்துவ பயன்கள் 

கரிசலாங்கண்ணி, வெண்கரிசலை அல்லது கையாந்தகரை ஒரு மருத்துவ மூலிகை செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளைக் கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.

இதற்கு கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் மஞ்சள் கரிசாலை ஆகிய வேறு பெயர்களும் உண்டு. தற்போது இந்த பதிவில், கரிசலாங்கண்ணியின் (பிருங்கராஜம்) நன்மைகள் பற்றி பார்ப்போம்.

இரத்தம் சுத்தமாகும் 

blood [Imagesource : Representative]
தினமும் மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையை உபயோகித்து வந்தால், இரத்தத்தில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்பட்டு இரத்தம்  சுத்தமாகும். மேலும் இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். கரிசலாங்கண்ணி இலையையும், கருவேப்பிலை இலையையும் காய வைத்து இடித்து தூள் செய்து இரண்டும் சம அளவு கலந்து கொண்டு  காலை மாலை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால்,  இரத்த மூலம், இரத்த சோகை, பெண்களின் சீரற்ற மாதவிடாய்  சுழற்சி சரியாகும்.

வலி நிவாரணி

pain [Imagesource : Representative]
இயற்கையான பிரிங்ராஜ் மூலிகையின் செயலில் உள்ள பொருட்கள் வலியைக் குறைக்க மத்திய நரம்பு மண்டலத்தில் நேரடியாக வேலை செய்கின்றன. வலியைக் குணப்படுத்தும் பல்வேறு மருந்துகளில் இது அடிக்கடி வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.

முடிஉதிர்வு 

எல்லா பெண்களும் நீண்ட, ஆரோக்கியமான கூந்தலைப் பெற விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட பெண்கள் கரிசலாங்கண்ணியின் வேர்களை நீங்கள் உபயோகிக்கக்கூடிய எண்ணெயில் கலந்து வைத்தால், உச்சந்தலையில் இரத்த ஓட்டம் துரிதப்படுத்தப்படுகிறது.

hairfalls [Imagesource : Representative]
முடிக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனை வழங்குவதன் மூலம், இது புதிய மயிர்க்கால்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த எண்ணெய் முழுமையாக உறிஞ்சப்படுவதை உறுதிசெய்ய, 10 நிமிடங்களுக்கு உச்சந்தலையில் எண்ணெயை மசாஜ் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

உடல் சூடு 

bodyheat [Imagesource : Representative]
சிலருக்கு எப்போதுமே உடல் சூடாக இருப்பது தான் வழக்கம். இந்த பிரச்சனை உள்ளவர்கள், உடல் சூட்டைக் குறைப்பதற்கு கரிசலாங்கண்ணி தைலத்தை தேய்த்து குளித்து வர உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியடையும்.

சளி தொல்லை

cold [Imagesource : representative]
சளி, இருமல் பிரச்சினைக்கு உள்ளவர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவருமே இந்த கரிசலாங்கண்ணி சாறை மருந்தாக பயன்படுத்தலாம். இந்த சாறை குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் 2 சொட்டு கரிசலாங்கண்ணி சாறில் சில துளிகள் தேன் சேர்த்து குழைத்து நாக்கில் தடவலாம். அதே சமயம் பெரியவர்களாக இருந்தால் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளலாம்.

 

Published by
லீனா

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

5 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

5 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

6 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

7 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

8 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

8 hours ago