spilt end
Spilt ends-தலைமுடியின் கீழ் நுனி பகுதி வெடித்து இருப்பதற்கான காரணங்களும் பற்றி இப்பதிவில் காணலாம்.
தலைமுடி வெடிப்பு என்பது முடியின் நுனிப்பகுதியில் இரண்டாகப் பிளந்து முடியின் கருமை நிறம் மாறி காணப்படும்.
தலைமுடியின் நுனிப்பகுதி வெடிக்க காரணமாக இருப்பது தலைக்கு சரியாக எண்ணெய் தேய்க்காமல் இருப்பது தான் மேலும் எப்போதுமே வறண்ட தலைமுடி இருப்பவர்களுக்கும் இந்த முடி வெடிப்பு இருக்கும்.
வாரத்தில் ஒரு முறை நல்லெண்ணையை சூடு செய்து அதனை தலைமுடியில் தடவி 30 நிமிடம் கழித்து குளித்து வர வேண்டும்.
ஷாம்புகளை பயன்படுத்தும் போது குறைந்த அளவில்தான் பயன்படுத்த வேண்டும் .ஷாம்புகளை அதிகமாக பயன்படுத்தும் போது அது முடி வறட்சியை ஏற்படுத்தி முடி வெடிப்பை அதிகரித்து விடும் .அதனால் எண்ணெய் பசை உள்ள ஷாம்புகளை தேர்வு செய்து பயன்படுத்தவும்.
மேலும் ஷாம்புகளில் உள்ள கெமிக்கல் வீரியம் குறைய ஷாம்பு பயன்படுத்தும் போது பாலுடன் சேர்த்து கலந்து பிறகு தலைக்கு தேய்த்து குளித்துக் கொள்ளவும்.
அவ்வப்போது அரிசி வடித்த தண்ணீரை தலைக்கு தேய்த்து 30 நிமிடம் கழித்து குளித்துக் கொள்ளவும்.
மேலும் வாரத்திற்கு ஒரு முறை தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெய் சம அளவு கலந்து தேய்த்து 30 நிமிடம் கழித்து குளித்து வந்தால் தலைமுடியில் உள்ள பூச்சி வெட்டு புழுவெட்டுகள் நீங்கும்.
ஹேர் டையர் போன்றவற்றை தலைமுடிக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குளிப்பதற்கு முன் தலைக்கு எண்ணெய் தேய்த்து விட்டு குளிக்க வேண்டும்.
தலை குளிப்பதற்கு முன் கொஞ்சமாவது எண்ணெய் பசையுடன் இருக்க வேண்டும் இல்லையெனில் மேலும் முடியின் வறட்சியை ஏற்படுத்தி முடி உதிர்வையும் ஏற்படுத்தும்.
தலை குளித்த பிறகு முடியை கனமான துணையை கொண்டு துடைப்பதை தவிர்க்கவும் ,இதனால் முடி வேருடன் வர காரணமாகும் .அதனால் சாப்டான துணிகளை பயன்படுத்துங்கள் .
மேலும் இவ்வாறு வெடிப்பு உள்ள முடிகளை மட்டும் கத்திரிக்கோல் கொண்டு நறுக்கி விட்டால் மீண்டும் வளரும்போது நன்றாக வளரும்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…